நபிகள்நாயகம்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களின் பொன்மொழி:.
ஓவ்வொரு நாளும் அதிகாலையில் மனிதனுடைய உடல்
உறுப்புகள் அனைத்தும் நாவை பார்த்து இவ்வாறு சொல்கிறது. நாவே நீ சரியாக நடந்தால் நாங்கள்
நிம்மதியாக இருப்போம். நீ சரியின்றி நடந்து கொண்டால் நாங்களும் நிம்மதியின்றி
ஆகிவிடுகிறோம்.
அல்லாமா ரூமியின் விளக்கமொழி:.
சுற்றுபுறமும் இருளாக இருக்கின்றது. எல்லா பகுதிகளிலும் பஞ்சும்
நிறைந்துள்ளது. அங்கு நெருப்பு பற்றிக்கொண்டால் கொழுந்து விட்டெரியும் தீயின்முன்
பஞ்சின் கதி என்னவாகும்?
தெளிவுரை:.
வாயை திறந்தால் குழப்பங்கள் நிகழ்ந்து விடும் என்ற அச்சமிருந்தால் அந்த நேரங்களில்
மௌனமாக இருப்பதே மிகச்சிறந்தது. கேட்பவரின் காதுகளில் உங்கள் வார்த்தைகள் அமிலமாக
புகுந்து விட்டால் அப்புறம் கலகம்தான்:.
No comments:
Post a Comment