நபிகள் நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய படிப்பினை தரும் நிகழ்ச்சி.
பனூஇஸ்ராஈல் கூட்டத்தாரில் ஓரு வெண் குஷ்ட நோயுடையவன், ஒரு
வழுக்கைத் தலையுடையவன், ஒரு குருடன் ஆகிய மூவரையும் இறைவன் சோதிக்க நாடி, அவர்களிடம்
ஒரு மலக்கை அனுப்பி வைத்தான். அவர் (முதலில்) வெண் குஷ்ட நோயுடையவரிடம் வந்து ‘,
உமக்கு மிக விருப்பமானது எது?; என வினவினார். அதற்கவர் ,’ அழகிய நிறம், அழகிய
தோல், மக்கள் அருவருக்கும் (இந்நோய்) என்னை விட்டும் போய்விடுவது ஆகியவை; என்றார்.
அம்மலக்கு தமது கரத்தால் தடைவவே, அவரது
அருவருப்பான நிறம் போய்விட்டது. அவருக்கு அழகிய நிறமும், (தோலும்) கொடுக்கப்பட்டது.
பின்னர் உமக்கு எச்செல்வம் மிக விருப்பமானது?; என அவரிடம் அம்மலக்கு வினவினார்.
அவர் ஒட்டகை ; எனக் கூறவே, அவருக்கு சினை ஒட்டகை வழங்கப்பட்டது. அல்லாஹ் உமக்கு
பரகத் செய்வானாக! என (அவருக்கு) துஆக் கேட்டுவிட்டுப் பின்னர் வழுக்கைத் தலையுடை யவரிடம்
அம்மலக்கு வந்து, ; உமக்கு மிக விருப்பமானது எது?; என வினவினார். அதற்கவர் “அழகிய
தலைமுடி, மக்கள் என்னை வெறுக்கும் இவ்வழுக்கை என்னை விட்டும் போய்விட வேண்டும்” என்றார்.
அவரை அம்மலக்கு தமது கரத்தால் தடவவே, அவரது வழுக்கை அவரை விட்டுப்போய்விட்டது.
அழகிய தலைமுடி அவருக்குக் கொடுக்கப்பட்டது. பின்னர் அம்மலக்கு அவரிடம் உமக்கு
எச்செல்வம் மிக விருப்பமானது?; என வினவினார். அவர் பசு மாடு” எனக் கூறவே, அவருக்கு
ஒரு சினைப் பசு மாடு வழங்கப்பட்டது. அல்லாஹ் உமக்கு இதிலே பரகத் செய்வானாக!” என
(அவருக்காக) துஆச் செய்துவிட்டுப் பின்னர் குருடரிடம் வந்தார், உமக்கு மிக
விருப்பமானது எது?;
என வினவினார். அதற்கவர் “ அல்லாஹ் எனக்குப்
பார்வையை வழங்கி, அதன் மூலம் நான் மக்களைப் பார்க்க வேண்டும்” என்றார்.அவரை
அம்மலக்கு கரத்தால் தடவவே, அல்லாஹ் அவருக்குப் பார்வையை மீளக்கொடுத்தான். பின்னர்
அம்மலக்கு அவரிடம் எச்செல்வம் உமக்கு மிக விருப்பமானது?” என வினவினார். அவர் “ ஆடு
“ எனக் கூறவே, அவருக்கு ஒரு சினை ஆடு வழங்கப்பட்டது.
மூவருக்கும் கிடைத்த கால்நடைகள் குட்டி போட்டன.
முதலாவது மனிதருக்கு ஒட்டக மந்தையும், இரண்டாவது மனிதருக்கு மாட்டுப் பண்ணையும்,
மூன்றாம் மனிதருக்கு ஆட்டு மந்தையும் உருவாகியது.
பின்னர்
அம்மலக்கு வெண் குஷ்ட நோயாளியாக இருந்தவரிடம், வெண் குஷ்ட நோயாளியின் தோற்றத்தில்
வந்து நான் ஒரு ஏழை மனிதன். என் பிரயாணத்தில் என் பொருட்கள் தீர்ந்து போய்விட்டன.
இன்று அல்லாஹ்வையன்றியும், பின்னர் உம்மையன்றியும் தவிர எனக்கு வேறு வழியில்லை.
ஆகவே உமக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும், பொருள் செல்வத்தையும் வழங்கிய
அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு உம்மிடம் ஓர் ஒட்டகையைக் கேட்கிறேன். அதனைக் கொண்டு
என் பயணத்தைப் போதுமாக்கிக் கொள்வேன்” என்றார். அதற்கவர்
ஏராளமான கடமைகள்
உள்ளன.”(அவைகளை நிறைவேற்ற வேண்டியிருப்பதால் உமக்கு ஒட்டகை தர முடியாது)
என்றார்.அதற்கு அம்மலக்கு நான் உம்மை அறிவேன். நீர் (ஒரு காலத்தில்)மக்கள் வெண்
குஷ்ட நோயுடை யவராகவும், ஏழை யாகவும் இருக்கவில்லையா? அல்லாஹ் உமக்கு(இவைகளை)வழங்கினானல்லவா?”
எனக் கூற, அதற்கவர் (அதை மறுத்து) நான் இச்செல்வங்களை
என் மூதாதையர் களிடமிருந்து பரம்பரைச் சொத்தாக பெற்றேன்” எனக் கூறினார். அதற்கு அம்மலக்கு
இக்கூற்றில் நீ பொய் கூறுபவராக இருந்தால், முன்னர் இருந்ததைப் போன்று அல்லாஹ்
உம்மை ஆக்குவானாக!” எனக் கூறிச் சென்றார். பின்னர் அம்மலக்கு வழுக்கைத் தலை உடையவரிடம்
வழுக்கைத் தோற்றத்தில் வந்து அவரிடம் (முன்னவரிடம்) கேட்டது போலக் கேட்டார்.
அவரும் முன்னவர் பதிலளித்தது போல பதிலளிக்கவே அம்மலக்கு “உமது கூற்றில் பொய்
கூறுபவராக இருந்தால் நீர் முன்னர் இருந்தது போன்றே அல்லாஹ் உம்மை ஆக்குவானாக !”எனக்
கூறிச் சென்றார்.
பின்னர்
அம்மலக்கு குருடரிடம் குருடராக வந்து “நான் ஏழை; வழிப்போக்கன்; பிரயாணத்தில் என்
பொருட்கள் தீர்ந்து விட்டன. இன்று எனக்கு அல்லாஹ்வையும், பின்னர் உம்மைக் கொண்டுமே
தவிர வேறு வழியில்லை. உமக்கு உமது பார்வையை மீட்டித்தந்த அல்லாஹ்வின் பெயரைக்கொண்டு
உம்மிடம் ஓர் ஆட்டைக் கேட்கிறேன். அதனைக்கொண்டு என் பயணத்தைப் போதுமாக்கிக் கொள்வேன்”
என்றார். அதற்கவர் “நான் குருடனாக இருந்தேன். அல்லாஹ் எனக்குப் பார்வையை மீட்டித்
தந்தான். (எனது செல்வத்தில் நீர் விரும்பியவைகளை எடுத்து செல்லும். நீர் விரும்பியவைகளை
விட்டுச் செல்லும்! நீர் எடுத்த எந்தப்பொருளையும் திருப்பித்தருமாறு அல்லாஹ்வின் திருப்தியை
நாடி நான் உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன்” எனக் கூறினார். அதற்கு அம்மலக்கு “உம்
செல்வங்களை உம்மிடமே வைத்துக் கொள்வீராக. நீங்கள் மூவரும் சோதிக்கப்பட்டீர்கள்.
அதில் அல்லாஹ் உம்மை பொருந்திக் கொண்டான். உன் மற்ற இரு தோழர்கள் மீதும் அல்லாஹுதஆலா
கோபமடைந்து விட்டான்” எனக் கூறினார்.:
No comments:
Post a Comment