Friday, 11 May 2012

தாயின் அன்பே உயர்வு


                                        ::: தாயின் அன்பே உயர்வு :::
இறைவரிகள்:: நாம் மனிதனுக்குத் தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத் செய் (து போதித்) தோம்: அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.: (அல்-குர்ஆன் 31:14
அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உப் (சீ) என்று (சடைந்தும்) சொல்லவேண்டாம் அவ்விருவரையும் (உம்மிடமிருந்து) விரட்டவேண்டாம்- இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்-குர்ஆன் 17:23)
இறைத்தூதரின் மொழிகள்:: உங்களின் தாய்மார்களின்  காலடியில்தான் சுவர்க்கமே இருக்கிறது.
ஒரு நபித்தோழர் நபியின் தர்பாருக்கு வந்து நான் உபகாரம் செய்ய தகுதியான, முதன்மையான நபர் யார் என்று கேட்கிறார். அதற்கு நபியவர்கள் உன் தாய் என்றார்கள். பிறகு யார் என்கிறார். உனது தாய் என்றார்கள். பிறகு யார் என்கிறார். உனது தாய் என்றார்கள்.என் தாய்க்குத்தான் முதல் பணிவிடையும், உபகாரமும்.இதற்குப்பிறகு யாருக்கு நான் கடமைப்பட்டுள்ளேன் என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் உன் தந்தைக்கு என்றார்கள்.   
அம்மா என்ற வார்த்தையை கேட்கும் போதெல்லாம் மனதினில் உணர்ச்சி பிரவாகம் தோன்றுவது இயல்பே. தொப்புள் கொடி அறுத்த நாள் முதல் ஒரு தாயுக்கும், சேயுக்கும் உள்ள பாசமும்,பந்தமும் எந்த சக்தியாலும் பிரிக்க இயலாத உன்னதமான புனிதமான தொடர்பாகும்.
இனம், மொழி, மதம், நாடு என மாறுபட்டாலும் எல்லோருமே ஒரே மனிதப் பிறவிகள் தான்.மனிதன் இறைவனின் படைப்பு.என்றாலும் அவனின் பிறப்பிடம் ஒரு பெண்ணின் கருவறைதான்.அந்த தாயுக்கு நாம் என்ன செய்ய போகிறோம்.  பொதுவாக எல்லாத் தாய்களும் விரும்புவது, வேண்டுவது, எதிர்பார்ப்பது நம் மக்கள் எல்லா செல்வங்களும் பெற்று சிறந்து விளங்கவேண்டும் என்பதுதான்.
அந்த தாய்மார்கள் பிள்ளைகளிடம் பொன் வேண்டும், பொருள் வேண்டும், வகைவகையான உணவுகளும், ஆடைகளும் வேண்டும் என்று கேட்பதும் இல்லை.எதிர்பார்ப்பதும் இல்லை.
மாறாக தாம் ஈன்ற செல்வங்கள் தம்மை இறுதி காலம்வரை பரிவோடும், பாசத்தோடும், நேசத்தோடும்  உடனிருந்து கனிவாக கவனித்துக்கொள்வதையே  விரும்புவார்கள்.
ஆனால் இன்று நவ நாகரீக ஆடம்பர வாழ்க்கை வாழும் மெத்தபடித்த பணக்கார பிள்ளைகளில் சிலர் தங்களின் வயதான, நோய்வாய்ப்பட்ட, தாயை தங்களுடன் வைத்து பராமரிக்க விரும்புவதில்லை. உடலும் உள்ளமும் தளர்ந்து, கூன் விழுந்து, பார்வைத்திறன் குன்றி,பல பிணிகளால் அவதியுறும் பெற்றவளை அனாதை இல்லத்திலும், முதியோர் காப்பகத்திலும் சேர்த்து விடுகிறார்கள். வயதானவர்களை வைத்து பராமரிப்பது தங்களின் உல்லாச, சந்தோஷ வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருப்பதாக எண்ணுகின்றனர்.
“எந்நன்றி கொன்றார்க்கும்  உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு” என்று திருக்குறளும் சொல்கிறது.அதாவது தாய், தந்தையருக்கு துரோகமிழைப்பவர் எந்நாளும் சந்தோஷமாக இருந்து விட முடியாது.
                                        முடிவில் சில வரிகள்::
அருமை பிள்ளைகளே ! திருச்செல்வங்களே ! அம்மாவைக் கண்கலங்காமல், மணம் நோகாமல், போற்றிக்காப்பாற்றுங்கள்.
                                  :வஸ்ஸலாம் வபிள்ளஹித்தவ்பீக் வல்ஹிதாயா:

No comments:

Post a Comment