Sunday, 27 May 2012

மத நல்லிணக்கம் :


மாநபி வலியுறுத்திய மத நல்லிணக்கம் :

இன்றைய உலகில் சமூகங்களுக்கிடையில், மதங்களுக்கு மத்தியில் ஒற்றுமையும், சகிப்புத்தன்மையும் குறைந்து வேற்றுமையும், சண்டை சச்சரவுகளும் மேலோங்குவதை காணுகிறோம்.
எல்லா மதங்களுமே நல்ல பண்புகளையும், வேற்றுமையில் ஒற்றுமையையும், அமைதியான முறையில் வாழும் சூழ் நிலையையுமே போதிக்கிறது.ஆனால் மதத்தின் பெயரில் அமைதியின்மையையும், குழப்பங்களையும் மத வெறியர்கள் உருவாக்குகிறார்கள்.
இந்நிலையில் மத நல்லிணக்கம், மாற்று மதத்தவர்களையும் மதிக்கும் அழகிய பண்புகளைப்பற்றி அல்குர்ஆணின் போதனைகள் அமைந்திருக்க காணலாம். இறுதித்தூதர் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் மதினாவில் பல இன மக்களுக்கிடையில் நல்லுறவு, நல்லிணக்கத்தோடு வாழ்ந்து எல்லோரும் அமைதியோடும், சுபிட்சமாகவும் வாழ்ந்திட மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய சரித்திரச்சான்றுகள் யாவை என்பதை சில நிகழ்வுகளின் மூலம் உங்களுக்கு இக்கட்டுரை வாயிலாக சமர்ப்பிக்கிறேன்.
அல்குர்ஆண்  28வது அத்தியாயம் 8வது வசனத்தில் “  முஸ்லீம்களே  உங்களிடம் போர் புரியாமல், உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்ற நினைக்காமல் உங்களுடன் நட்புடன் இருக்கும் முஸ்லீம் அல்லாதவர்களுடன் நீங்களும் நியாயமாகவும் நல்லவிதமாகவும் நடந்து கொள்ளுங்கள்.” என்ற கருத்து உணர்த்தப்படுகிறது.

அல்குர்ஆனில் அல்லாஹுத்தஆலா “பிர்று “ என்ற வார்த்தையை பெற்றோர்களுக்கு உபகாரம் செய்யுங்கள் என்பதற்கே பயன்படுத்துகிறான். அந்த வார்த்தையைத் தான் முஸ்லீம் அல்லாதவர்களுடன் நல்ல விதமாக நடந்துகொள்ளுங்கள் என்ற கருத்தை வெளிப்படுத்த பயன்படுத்தியுள்ளான். எனவே இவ்வசனத்தின் மூலம் மத நல்லிணக்கத்தையும், மாற்று மதத்தவர்களை மதிப்பதையும் அவசியம் என்பதை இறைவன் தெளிவுபடுத்துவதாக உலக லாவிய அறிஞர் அல்லாமா யூசுப் அல்கர்லாவி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இதே கருத்தைதான் கீழ்வரும் வசனங்களின் கருத்துக்களும் உருதிப்படுத்துகிறது. அத்தியாயம் 33- வசனம் -21. அத்தியாயம் 109 –வசனம் – 6.
(முஸ்லீம்களே!)பிறமதத்தவர்கள்வணங்கக்கூடியவைகளைநீங்கள்திட்டாதீர்கள்.காரணம்அறியாமையினால்அவர்கள்அல்லாஹ்வைதிட்டுவார்கள்.எனவேஅவர்களிடம்உங்களின்அணகுமுறைஇவ்வாறுஇருக்கவேண்டும்.”அவர்களிடம் கூறுங்கள்!நீங்கள்வணங்ககூடியவைகளைநாங்கள்வணங்கமாட்டோம்.நாங்கள்வணங்கிடும்இறைனைநீங்களும்வணங்கப்போவதில்லை(எனவே நமக்குள் எவ்வித சண்டை சச்சரவுகளும் தேவையில்லை) உங்கள் மதம் உங்களுக்கு. எங்கள் மார்க்கம் எங்களுக்கு” என்று கூறுவதின் மூலம் சிறந்த மத நல்லிணக்கத்தை அல்குர்ஆன் கற்றுத் தருகிறது.
அல்லாமா யூசுப் அல்கர்ழாவி அவர்கள் தன்னுடைய அல் ஈமான் வல்ஹயாத்  என்ற நூலில் கீழ்வரும் வரலாற்றுச் சம்பவத்தை குறிப்பிடுகிறார்கள். இஸ்லாமிய உலகின் முதல் கலீபா (ஜனாதிபதி) அபூபக்கர் அவர்களின் ஆட்சி காலத்தில் நடந்த போர் ஒன்றில் முதியவர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டுக் கிடந்ததை பார்த்த கலீபா அவர்கள் அதை வன்மையாக கண்டித்து போர்க்களத்தில் முதியவர்களையும், பெண்களையும், சிறார்களையும், தாக்கக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியாதா ? இஸ்லாம் தடை செய்த இப்பாதக செயலை செய்தவர் யார் ? என்று கேட்டார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் நம்மையும் விரோதிகள் இவ்வாறு கொலைசெய்யவில்லையா?என்றுஅச்செயலைநியாயப்படுத்தமுனைந்தார்கள். இதைசெவிமடுத்திய சாந்த குணம் நிரம்பிய கலீபா அவர்களின் முகம் கடும் சினத்தால் சிவந்தது. பின்பு தன்தோழர்களைநோக்கி பாரசீகர்களையும், ரோமர்களையுமா நீங்கள் பின்பற்றுகிறீர்கள் ? இறை வேதமும் இறைத் தூதரின் வாக்கும் நமக்கு போதாதா? என்றார்கள் .
இந் நிகழ்ச்சியின் மூலம் இஸ்லாமியர்கள் எச்சூழ்நிலையிலும் வரம்பு மீறுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பது புலப்படுகிறது.
எனவே மதப்பற்று இருக்கலாம் மதவெறி இருக்கக்கூடாது. இனப்பற்று இருக்கலாம் இனவெறி இருக்கக்கூடாது என்பதே ஆழ்ந்த ஆழமான கருத்து. இதையே பின் வரும் நபிமொழியில் தெளிவுபடுத்தப்படுகிறது. ஒரு முறை புசைலா  என்ற சஹாபி பெண்மணி நபி (ஸல் ) அவர்களிடம் வந்து இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா  என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இன வெறி அல்ல. மாறாக தன் சமூகத்தை சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி என்றார்கள்.- நூல் அஹ்மத்:
ஆகவே மத வெறிக்கோ இனவெறிக்கோ இஸ்லாத்தில் இடமில்லைஎன்பதைமாநபிஅவர்கள்வலியுறுத்தியுள்ளார்கள். நீங்கள் பூமியில் உள்ளவர்களை நேசியுங்கள், இரக்கம் காட்டுங்கள். வானில் உள்ளவன் உங்களை நேசிப்பான், இரக்கம் காட்டுவான் என்ற கருத்தை வெளிப்படுத்தி முழு மனித சமூதாயமும் ஒரே சமுதாயமே என்பதை வலியுறுத்தினார்கள்.
அவ்வாறேபிறமதத்தைச்சார்ந்ததலைவர்களையும்,அவர்களின் கருத்துக்களையும் மதிக்கும் அருமை நபியின் பண்புகளை மக்கா வெற்றியின் போது காண முடிந்தது.
அதாவது மக்காவின் மண்ணின் மைந்தர்களாகிய முஹாஜிரீன்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் புகுந்தார்கள் என்ற காரணத்தினால் சொந்த தாய்நாடு மக்காவை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். தன் அன்பான குடும்பம், சொந்த பந்தங்களை துறந்து அகதிகளாக மதினாவில் தஞ்சம் புகுந்தார்கள். ஆனால் எட்டு ஆண்டுகளிலேயே மிகப்பெரும் படைபலம், ஆல்பலத்துடன் மக்காவிற்குள்  நுழைந்த முஹாஜிரீன்கள்தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மனதிலே நினைத்து இன்று பழிவாங்கும் நாள் என்று தங்களுக்கு மத்தியில் கூறிக்கொண்டார்கள். இதை செவிமடுத்த அபூசுப்யான் பீதி அடைந்தவராக மாநபியிடம் ஓடி வந்து பாதுகாப்பு கேட்கிறார். அது நாள் வரை தனக்கும், தன் தோழர்களுக்கும் இழைத்த கொடுமைகளை மன்னித்து நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் இப்படி அறிவிக்கிறார்கள்.” இன்றைய நாள்  மன்னித்து இரக்கத்தோடு நடந்து கொள்ளும் நாள் என்று: இன்னும் அபூசுப்யான் வீட்டில் அபயம் தேடி நுழைந்தவர் பாதுகாப்பு பெற்றவர் என்றும் அறிவித்தார்கள்.
இன்றளவும் இஸ்லாமிய கோட்பாட்டில் வாழும் முஸ்லீம்கள் மாற்று மததுக்கோ, அதை சார்ந்தவர்களுக்கோ எவ்வித களங்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் சில விஷமிகள், மனித குலத்தின் மகா எதிரிகள் மத நல்லிணக்கத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தி அச்செயலுடன் இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் இணைத்து உலக அமைதியின்மைக்கு முஸ்லீம்களே  காரணம் என்ற நச்சுக் கருத்துக்களை பரப்புகின்றனர். ஆனால் முஸ்லீம்கள் இறை வேதம், இறைத்தூதரின் வாக்கின் அடிப்படையில் அழகிய பண்புகளை வெளிப்படுத்தி இவர்களின் சொற்போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் இன்ஷாஅல்லாஹ்.:
        எல்லாம் அறிந்த இறைவனுக்கே எல்லாப்புகழும் .:
                வபில்லாஹித்தவ்பீக் வல்ஹிதாயா.:
                                      வஸ்ஸலாம் .:


Monday, 21 May 2012

புன்னகையே பொன்னகையிட அழகு

எது அழகு? ========
ஒரு புன்னகை என்னவெல்லாம் சொல்கிறது?
நான் உங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சி
அடைகிறேன்.
...
நான் உங்களை விரும்புகிறேன்.
நான் உங்களுக்கு உதவ நினைக்கிறேன்.
நான் உங்களிடம் நன்றியுள்ளவன்
நான் உங்களுக்கு நம்பிக்கையானவன்
நான் உங்களிடம் நன்மதிப்பு கொண்டவன்.
நான் உங்களுடைய தேவைகளை
நிறைவேற்றுவேன்
நான் உங்களை நம்புகிறேன்
என் மனது இனிமையானது
நான் அன்புள்ளம் கொண்டவன்
இன்னும் எத்தனை எத்தனையோ
அர்த்தங்கள்…
புன்னகையே பொன்னகையிட அழகு!
 
sp.pattinam-Abdul Kayyoom Baqavi

Wednesday, 16 May 2012

மனித நேயமும்


       மாநபியும் மனித நேயமும்
இன்றைய உலகில் எங்கும் “ என்றும் “ எப்பொழுதும் “மொழியப்படும் வார்த்தை “ இஸ்லாம் “ இஸ்லாம் “ என்பதுதான் என்று கூறினால் அது மிகையல்ல. அந்தளவு உலகம் முழுவதும் விரிந்து பறந்து காணப்படுகிறது.
ஆனால் இந்த தீனுல் இஸ்லாமை மாநபி (ஸல்) அவர்கள் மக்களிடம் எடுத்து சென்று அதன் பால் அவர்களை அழைத்தபோது மிகப்பெரிய எதிர்ப்புகளும், சோதனைகளும் புயலன கிளம்பியது .
இருந்தும் நபியின் சொல்லில் உள்ள ஆழமான கருத்துகளும், அதில் பொதிந்திருந்த மனித நேயமும் அநீதியிலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் விடுபடவேண்டும் என்று ஏங்கிய உள்ளங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. ஆகவே ஓடுக்கப்பட்ட மக்கள் இஸ்லாமில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். பொதுவாக ஓடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு யார் குரல் கொடுத்தாலும் ஓடுக்கியவர்களின் எதிர்ப்புக்கும், கோபத்திற்கும் ஆளாக வேண்டி வரும்.
இவ்வாறுதான் முஹம்மது நபி (ஸல் ) அவர்கள் இஸ்லாம் என்ற சுதந்திர காற்றை வெளிப்படுத்திய போது அந்த மக்கள் எதிர்ப்பை காட்டினார்கள். ஆனாலும் நபியின் உயர்ந்த, சிறந்த பண்பை பாராட்டினார்கள். மதித்தார்கள். உண்மையாளர், நம்பிக்கையாளர் என்ற பட்டத்தை வழங்கி புகழ்ந்தார்கள், வாழ்த்தினார்கள்.
இந்நிலையில் அந்த மக்களின் மனிதாபிமானமில்லாத, கரடு முறடான கொள்கைகளையும், மனித நேயமற்ற செயலையும் கண்டு வருந்தினார்கள். அவற்றை களைவதைப்பற்றி சிந்தித்து, அதற்காக கடும் முயற்ச்சி செய்து அதில் வெற்றியும் பெற்றார்கள்.
ஆம் இனவெறியும், மொழிவெறியும் மிகுந்த அன்றைய அரபு மக்களின் மனதில் மனிதர்கள் அனைவரும் ஒரே குடும்பம், ஒரே சமூகம் என்ற மாபெரும் சித்தாந்தத்தை ஆழமாக பதிய வைத்தார்கள்.
அருள் மறை அல்கு ர்ஆனின் வசனமாகிய, மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர் ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும், ஆக்கினோம் (அதனை வைத்து பெருமையடித்துக் கொள்வதற்காக அல்ல ) அல் குர்ஆண் 4:13 என்ற வசனத்தின் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள்.

மா நபியின் மனித நேயத்தை வரலாறு நெடிய நாம் காணலாம் .
ஹாரிஸா என்பவரின் மகன் ஜைத் என்ற சிறுவர் மக்காவின் அடிமைச்சந்தையில் ஏலம் விடப்பட்டார்.  அவரை விலைகொடுத்து வாங்கி தனது அருமை கணவர் அன்பு நபி (ஸல் ) அவர்களுக்கு அன்பளிப்பு செய்தார்கள் அன்னை கதீஜா அம்மையார். அவரை பெற்றுக்கொண்டு தனது பணிவிடைக்கு அமர்த்திக்கொண்டார்கள் பூமான் நபி (ஸல் ) அவர்கள்.
அடிமைதானே என்று ஏளனத்துடன் பார்க்காமல், உதாசீனம் செய்யாமல் தனது வளர்ப்பு மகனாகவே ஆக்கி கொண்டார்கள் அண்ணல் பெருமானார் (ஸல் ) அவர்கள்.
ஜைதும் பண்பு நபிக்கு பணிவிடை செய்வதில் பரவசமடைந்தார். நபியின் மீது அளவு கடந்த பாசமுடன் நடந்து கொண்டார். இந் நிலையில் காணாமல் போன  தன் மகன் மக்காவில் இருப்பதை அறிந்த அவரின் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்து மக்காவிற்கு புறப்பட்டு வந்து , நபி (ஸல் ) அவர்களை சந்தித்து தனது திருப்பி கொடுத்து விடுங்கள் உங்களுக்கு வேண்டிய பொருளை தருகிறோம் என்று கூறினார்கள்.
அவர்களின் வேண்டுதலை பொறுமையுடன் செவி மடுத்திய நேச நபி (ஸல் ) அவர்கள் இவர் உங்கள் பிள்ளை, உங்களுக்கு சொந்தமானவர், நீங்கள் விரும்பி, அவரும் விரும்பினால் தாராளமாக அழைத்துச்செல்லலாம்.அதற்கு எந்த தொகையும், பொருளும் எனக்கு கொடுக்கத்தேவையில்லை என்றார்கள் .
இந்த மனித நேயத்தை மனதார பாராட்டி, புகழ்ந்து மகிழ்ச்சியாக தன் மகனிடம் வந்து நீர் புறப்படு, நபி (ஸல் ) அவர்களிடம் அனுமதி பெற்றுவிட்டோம் என்றார்கள். அதற்கு ஜைத் தனது பெற்றோர்களிடம் உங்களை நான் மதிக்கிறேன், நேசிக்கிறேன். ஆனால் முஹம்மது நபி (ஸல் ) அவர்களை பிரிந்து என்னால் ஒரு நொடிப்பொழுதும் இருக்க முடியாது.தங்களுடன் வர முடியாத நிலைக்கு என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறிவிட்டார் .

அருமையானவர்களே ! தங்களின் பெற்றோர்களை பல காலம் பிறிந்து வாழ்ந்த மகன், அந்த பெற்றோர்களை சந்தித்த பிறகும் உடன்செல்ல மறுத்து விடுகிறார் . காரணம் சாதாரண குடும்பத்தில் பிறந்து, அடிமை என்ற அடைமொழியோடு வந்த இவரை உயர்ந்த கோத்திரம், சிறந்த வமிஷம், மகத்தான அந்தஸ்த்துடன் இருந்த நபி (ஸல் ) அவர்கள் ஜைத்திடம் மாபெரும் மனித நேயத்துடன் நடந்துகொண்ட விதம் அவரை இந் நிலைக்கு மாற்றியது.
அவ்வாறே நபியவர்களிடம் வேலை செய்து வந்த ஒரு யூதச்சிறுவன் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த போது அச்சிறுவனின் இருப்பிடத்தை தேடிச்சென்று நலம் விசாரித்தார்கள்.
ஒரு போரிலிருந்து திரும்பும் சமயம் வழியில் ஒரு யூதப்பெண் அண்ணார் அவர்களுக்கு விருந்துண்ண அழைத்தபோது மா நபியவர்கள் அவ்வழைப்பை ஏற்று விருந்துண்ண சென்றார்கள்.
ஒரு முறை நபி (ஸல் ) அவர்களின் உற்றத்தோழர் அபூபக்கர் (ரலி ) அவர்களுக்கும்,பனூஹாஸ் என்ற யூதனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் பிரச்சனை முற்றி யூதரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார்கள் அபூபக்கர் (ரலி ) அவர்கள். இப்பிரச்சனைக்கு தீர்வை காண  நீத நபியின் தர்பாருக்கே சென்றார்கள் அந்த யூதர்கள்.

அன்பானவர்களே ! அக்காலத்தில் முஸ்லீம்களுக்கு பரமவிரோதியாக இருந்த யூதர்களின் சிறுவனை நோய்விசாரிக்க சென்றது, அவர்களின் விருந்து அழைப்பை ஏற்றுக்கொண்டது, தன்னை நாடிவந்தவர்கள் யாராக இருந்தாலும், எம்மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர்களை அரவணைப்பது நபியின் மனித நேயத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
எனவே நாமும் அவர்களை புகழ்வதோடு மட்டும் போதுமாக்கி கொள்ளாமல் உன்னத நபியின் உயர்ந்த பண்புகளுக்கு செயல் வடிவம் கொடுத்து மாநபியைப்போல் மனித நேயத்துடன் வாழ்வோம், பிறரையும் வாழ வைப்போம் . மகத்தான சமுதாயத்தை உருவாக்குவோம்.:

             ###வபில்லாஹித்தவ்பீக் வல் ஹிதாயா###

                                    ::::வஸ்ஸலாம்::::


Tuesday, 15 May 2012

முதல் ஆலயம் தோன்றிய வரலாறு


பைத்துல்லாஹ் தோன்றிய வரலாறு

இறையருளால்  இக்காலத்தில்  எங்கும்  இறையில்லங்கள்  நிரம்பியுள்ளன . முஸ்லிம்கள்  இறைவனை  தொழிதிட  அவை நன்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன . இது இந்த சமுதாயத்திற்கு மட்டுமே அல்லாஹ் அருளிய பேருபகாரமாகும்.காரணம் முந்திய சமுதாயத்தினர் குறிப்பிட்ட இடத்தில்தான் வணக்கம் செய்திட வேண்டும். ஆனால் பூமி முழுவதும் தொழுமிடமாகவும் சுத்தமான பகுதியாகவும் இச்சமுதாயத்திற்கு மட்டுமே அல்லாஹ் வழங்கியுள்ளான்.
ஆனால் உலகில் வாழும் முஸ்லிம்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலுருந்து தொழுதாலும் அவர்கள் முன்னோக்குவது உலகில் முதன்முதலாக எழுப்பப் பட்ட இறையில்லம் “ கஅபாவை “ தான்.
இந்த பைத்துல்லாஹ் உலகம்உருவாக்கப்படுவதற்கு சுமார் 2000, ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட ஓர் இறையில்லம். இந்த செய்தியை அபூஹுரைரா (ரலி) அவர்கள் தம் மாணவர்களிடம் கூறிய போது உலகமே உருவாக்கப்படவில்லை. அந்த சூழ்நிலையில் கஅபா எப்படி இருந்திருக்க முடியும்?என்ற கேள்வி அவர்களுக்கு முன் எழுப்பப்பட்ட போது அவர்கள் இப்படி பதில் கூறினார்கள். அல்லாஹுத்தஆலா உலகை உருவாக்குவதற்கு முன்பு முழு உலகையும் தண்ணீரால் நிரப்பியிருந்தான். அல்லாஹ்வின் அர்ஷும் தண்ணீரின் மீதே அமைந்திருந்தது என்பது நபிமொழி. அந்நேரத்தில் ஓர் இடத்தில் மட்டும் நுரை வட்டமாக இருந்தது. அந்த இடத்தில் இரு மலக்குகளை ஏற்படுத்தி தன்னை வணங்கி வரும்படி இறைவன் கட்டளை பிறப்பித்திருந்தான். அம்மலக்குகளும், சுமார் இரண்டாயிரம் வருடங்கள் அவ்விடத்திலேயே அமர்ந்து அல்லாஹ்வை வணங்கி வந்தனர்.
இறைவன், தன் வல்லமையை வெளிப்படுத்த எண்ணி இவ்வுலகை உருவாக்க நாடியபோது இந்த நுரை அமைந்த பகுதியிலிருந்துதான் உலகின் உருவாக்கத்தை இறைவன் ஏற்படுத்தினான். அந்த இடம் தான் புனித கஅபா இருக்கும் பகுதி. எனவேதான் பூமியின் மத்திய பகுதியில் கஅபா அமைந்துள்ளது. அதன்பிறகு சுவனத்திலிருந்து ஒரு கூடாரத்தை மலக்குமார்கள் கொண்டுவந்து அவ்விடத்தில் வைத்து இறை வணக்கத்தில் ஈடுபட்டனர்.
எப்பொழுதும் முதல் மனிதர் பாவா ஆதம் (அலை) அவர்கள் பூமிக்கு வந்தார்களோ அப்பொழுது அவர்களுக்கு இக்கூடாரத்தை மலக்குமார்கள் அறிமுகம் செய்து வைத்தனர். அதை தொடர்ந்து ஆதம் (அலை) அவர்களும் தனக்கு தோதுவாக அக்கூடாரத்தை மாற்றி அமைத்து இறைவணக்கத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.
ஹஜ்ரத் ஆதம் (அலை) அவர்களின் மரணத்திற்குப் பின் வாணிற்கு உயர்த்தப்பட்டு விட்டது. ஆனால் அக்கூடாரத்தைச் சுற்றி அமைத்த சூழல் அப்படியே இருந்தது. அதன்பிறகு ஆதம் (அலை ) அவர்களின் மகனார் ஷீத் (அலை ) அவர்கள் இந்த கஅ பாவில் சிறிது மாற்றம் செய்து கட்டி முடித்தார்கள். இவர்களின் வழித்தோன்றலில் நபி நூஹ் (அலை) அவர்கள் வந்தார்கள். இவர்களின் காலத்தில் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெள்ளப்பிரளயம் ஏற்பட்டு உலகமே தண்ணீரால் அழிந்த போது இந்த கஅபாவின் அடிச்சுவடு மட்டுமே அப்படியேயிருந்தது.
இந்த அடையாளச் சுவடை வைத்துதான் நபி இப்ராஹீம் (அலை ) அவர்களுக்கு  “கஅ பா வை கட்டுங்கள் “என்ற கட்டளையை இறைவன் பிறப்பித்தான். இந்நிகழ்வு மட்டுமே அல்குர்ஆணின் 2:127 என்ற வசனத்தில்  தெளிவுபடுத்தப்படுகிறது. எனவே உலக மக்களின் முழுப்பார்வையையும், தன் பக்கம் ஈர்த்த இந்த கஅபாவை நிர்மானித்தவர்களை வரிசையாக பார்ப்போம்.
முதலாவது! மலக்குகளின் மூலமாக  அமைக்கப்பட்டது .
இரண்டாவது ! நபி ஆதம் (அலை ) அவர்கள் .
மூன்றாவது ! நபி ஷீத் (அலை) அவர்கள் .
நான்காவது ! நபி இப்ராஹீம் (அலை ) அவர்கள் .
ஐந்தாவது ! அமாலிக்கா என்ற சமூகத்தினர் .
ஆறாவது !ஜுரும் என்ற சமூகத்தினர் .
ஏழாவது! குஷை இப்னு கிலாப் அவர்கள் .
எட்டாவது ! குரைஷி கூட்டத்தினர் .
ஒன்பதாவது ! அப்துல்லா இப்னு  ஜுபைர் (ரலி ) அவர்கள் .
பத்தாவது ! ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப்  என்பவர் .
பின் குறிப்பு : குறைஷியர்கள்  காலத்தில்  கஅபா வின் சுவர்கள் பலகீனமானதால் அதை புதிதாக நிர்மாணம் செய்ய மக்களிடம் முழுக்க முழுக்க ஹலாலான நிதியை வசூல் செய்து இந்த  கஅபாவை நிர்மானித்தார்கள். ஆனால் அவர்கள் திரட்டிய நிதி முழு கஅபாவையும் நிர்மாணம் செய்ய போதுமானதாக இருக்கவில்லை. எனவே பகுதியை அப்படியே விட்டுவிட்டு மீதமானதை கட்டி முடித்துவிட்டார்கள். விடப்பட்ட பகுதிக்குத்தான் ஹதீம் என்று சொல்கிறோம் . இதுவும் கஅபாவின் ஒரு பகுதியாகவே கணிக்கப்படும். இந்த நிகழ்ச்சி நடைபெற்ற சமயத்தில் நபி (ஸல் ) அவர்களின்  வயது முப்பத்தி ஐந்தாக இருந்தது .
பிறகு  அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்  (ரலி ) அவர்கள் மக்காவின் கவர்னராக இருந்தபோது புனித கஅபாவை நபி இப்ராஹீம் (அலை ) அவர்கள் ஏர்படுத்திய அமைப்பில் கஅபாவின்  எந்தபகுதியும் விடப்படாமல்  முழுமையாக கட்டினார்கள் . அதன் பிறகு ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் என்பவர் மக்காவின்  கவர்னராக பொருப் பேற்றப்பின் குறைஷியர்கள் எவ்வமைப்பில் புனித கஅபாவை அமைத்தார்களோ அவ்வாறே இவரும் கஅபா வின் ஒரு பகுதியை விட்டுவிட்டு மீத முள்ளதை கட்டினார்கள் . பனூ அப்பாஸிய்யாக்களின்  ஆட்சியாளர்  ஹாரூன்  ரஷீத் அவர்கள் இமாம் மாலிக்  (ரஹ் ) அவர்களிடம் தாங்கள்  அனுமதித்தால் இந்த கஅபாவை நபி இப்ராஹீம் (அலை ) அவர்களும் , அதைத் தொடர்ந்து அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்  (ரலி) அவர்களும் எந்த அமைப்பில் கட்டினார்களோ  அதே அமைப்பில் நான் அமைக்கிறேன் என்று கோரிய போது இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தடுத்து விட்டார்கள் . காரணம் அரசர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள் . அதனால் கஅபாவின்  அமைப்பும் மாறிக்கொண்டே யிருக்கும். பிறகு அதன் புனிதத் தன்மையில்  குறைவு வந்து விடக்கூடாது என்று தடுத்து விட்டார்கள் .
முடிவில் சில வரிகள் :
உலகில்  தோன்றிய முதல் இறை இல்லம் கஅபா உட்பட அனைத்து மஸ்ஜிதுகளின்  நிர்வாகத்தினர்கள் அனைவரையும் அல்லாஹ்வே  தேர்ந்துதெடுத்து அறிமுகம் செய்து விட்டான் . அவர்களை தேடிக் கண்டுபிடித்து மஸ்ஜிதுகளின்  பொறுப்பாளியாக நியமிப்பதுதான்  முஸ்லிம்களின் கடமையாகும் . இறைவன் தேர்வு செய்த மஸ்ஜிதுகளின்  நிர்வாகத்தினர்கள் யார் ? இதோ !
அல்லாஹ்வின்  மஸ்ஜித்களை  பரிபாலனம் செய்யக்கூடியவர்கள் , அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையை கடைபிடித்து ஜக்காத்தை (முறையாகக் ) கொடுத்து அல்லாஹ்வை தவிர வேறெதற்கும்  அஞ்சாதவர்கள்  தாம். இத்தகையவர்தாம் நிச்சயமாக நேர்வழி பெற்றவர்கள் ஆவார்கள் .( அல் குர்ஆன்  9:18).         
                                                வஸ்ஸலாம்  

Monday, 14 May 2012

அழியா இறை ஒளி


யாருடைய நிர்பந்தமும் இன்றி சுயமாக உண்மையை உள்ளால் உள்ளபடியே சொல்லி,இஸ்லாத்தை ஏற்ற நமது சகோதரியின் பேட்டியை படியுங்கள் .



.
பிரிட்டனைச் சேர்ந்த பத்திரிகை நிருபர் யுவான் ரிட்லியைக் கவர்ந்த இஸ்லாம்

அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய ஏகாதிபத்திய சக்திகள் எவ்வளவுதான் இஸ்லாத்திற்கு எதிராக அவதூறான பிரச்சாரங்களை மேற்க்கொண்டாலும் இஸ்லாத்தின் அன்பு மற்றும் சமாதானத்தின் நற்செய்தி மக்களால் அடையாளம் காணப்படும் ஒரு நாள் வந்தே தீரும் என பிரபல பத்திரிகையாளரும், சர்வதேச மனித உரிமைப் போராளியுமான யுவானி ரிட்லி கூறினார்.

கேரள மாநிலம் குற்றிப்புரம் ஸஃபா நகரில் ஜமாஅத்தே இஸ்லாமியின் பெண்கள் மாநாட்டை துவக்கி வைக்கவிருந்தார் அவர். ஆனால் லண்டனில் இந்திய தூதரகம் அவருக்கு இந்தியா செல்ல விசா மறுத்ததால் வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலமாக மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். "அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்லாத்திற்கெதிராக அவதூறான பிரச்சாரங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்களை ஆக்கிரமிப்புகளையும் அருவருக்கத்தக்க நடவடிக்கைகளையும் மறைப்பதற்காகத்தான் இந்தப்பிரச்சாரத்தை மேற்க்கொள்கிறார்கள்.

ஃபலஸ்தீனில் துயரத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்பதற்காகவே என்னை ஏகாதிபத்திய சக்திகள் நோட்டமிடுகின்றன. ஃபலஸ்தீனிலும், ஆஃப்கானிலும், ஈராக்கிலும் கொடூரமான தாக்குதல்கள் மூலமும், கூட்டுக்கொலைகள் மூலமும் குண்டுகளை வீசுவதன் மூலமும் முஸ்லிம்களின் மீது நிரந்தரமாக ஏகாதிபத்திய சக்திகள் போரிட்டு வருகின்றன.
இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்ற மேற்கத்திய வாதிகளின் பொய் பிரச்சாரம் வெற்றிப்பெறாது. ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களின் வசம் சிக்கிய என்னை இஸ்லாத்தை நோக்கி திருப்பியது அவர்களுடைய கண்ணியமான நடவடிக்கைகளும் சுத்தமான நிலைபாடுகளும் தான். இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்றால் தாலிபான் போராளிகள் என்னிடம் ஒருபோது கண்ணியமாக நடந்துக் கொண்டிருக்க மாட்டார்கள். மேலும் எனது வாழ்வில் அது திருப்புமுனையும் ஆகியிருக்காது.

ஏகாதிபத்தியமும், சியோனிஷமுதான் இன்று உலகம் சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள். இவ்விரண்டு சக்திகளும் இஸ்லாத்திற்கு மட்டுமல்ல விரோதிகள் மனிதர்கள் அனைவருக்குமே விரோதிகள் தான். முஸ்லிம் பெண்கள் காலக்கட்டத்தின் சவால்களை புரிந்துக்கொண்டு களமிறங்கவேண்டும்." இவ்வாறு ரிட்லி உரையாற்றினார்

தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்லி எழுதிய கட்டுரை இது. இனி அவரது சொந்த நடையில்....

''நான் தாலிபான்களால் சிறை பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன்.
செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன்.

தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டுவது என் ரகசிய திட்டம். ஆனால் நான் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன்.

என்னைக் கைது செய்தவர்கள் முகத்தில் துப்பினேன், ஆக்ரோஷமாக எதிர்த்தேன். அதனால் அவர்கள் என்னை ஒரு ''கெட்ட பெண்'' என்று அழைத்தார்கள்.

ஆனால் நான் குர்ஆனைப் படிப்பதாகவும், இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு என்னை விடுதலை செய்து விட்டார்கள். (உண்மையைச் சொல்லப் போனால் நான் விடுதலையான போது யார் மகிழ்ந்தார்கள் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை'' நானா? அல்லது அவர்களா?)
எனது சொந்த ஊரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப் பற்றி அறியத் துவங்கினேன்.

நான் படிக்கப்படிக்க இனம்புரியாத ஆச்சரியம் என்னை ஆட்கொள்ளத் துவங்கியது. குர்ஆனில் நான் மனைவிமார்களை எப்படி அடிப்பது என்றும், மகள்களை எப்படி அடக்கி ஒடுக்கி துன்புறுத்துவது என்றும் ஆண்களுக்கு உபதேசிக்கும் வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பெண்ணின விடுதலையை ஒங்கி ஒலிக்கும் திருக்குர்ஆனின் நல்லுபதேசங்களைக் கண்டு திகைத்துப் போனேன்.

எனது கைதுக்குப் பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து நான் இஸ்லாமை எனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டேன். எனது இந்த மாற்றம் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திகைப்பு, ஏமாற்றம், உற்சாகம் போன்ற உணர்வுகளின் கலவையான நிலைமையை உண்டு பண்ணியது.

இன்று! மத நல்லிணக்கத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாக் ஸ்டிரா விமர்சனம் செய்திருப்பது என்னை ஏமாற்றமும், அச்சமும் கொள்ள வைக்கிறது. இவருக்கு பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேர், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மற்றும் இத்தாலியப் பிரதமர் ரெமானோ ப்ரோடி ஆகியோர் வேறு ஆதரவளிக்கின்றனர் என்பதுதான் வேடிக்கையான வேதனை.

புர்காவுக்கு வெளியேயும், உள்ளேயும் இரண்டு மாறுபட்ட வாழ்க்கை முறையை உணர்ந்த ஒரு பெண் என்ற அடிப்படையில் சொல்கிறேன்: இஸ்லாமிய உலகில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களின் அடக்குமுறையைப் பற்றி ஆரவாரமாக கவலைப்படுகிற கிட்டத்தட்ட அனைத்து மேற்கத்திய அரசியல்வாதிகளும் சரி, பத்திரிக்கையாளர்களும் சரி இஸ்லாத்தைப் பற்றியும், அது பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும் ஒன்றுமே தெரியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.
ஹிஜாபைப் பற்றியும், பருவமடையாத மணப்பெண்கள் பற்றியும், பெண்கள் கத்னாவைப் பற்றியும், கௌரவக் கொலைகளைப் பற்றியும், கட்டாயத் திருமணங்கள் பற்றியும் இவர்கள் சகட்டுமேனிக்கு எழுதியும் பேசியும் வருகிறார்கள். இந்த வன்கொடுமைகள் அத்தனைக்கும் இவர்கள் இஸ்லாத்தைக் குற்றவாளி ஆக்குகின்றார்கள். இவர்களது இந்த வெறித்தனமானப் போக்கு இவர்களது அறியாமையைத்தான் பறைசாற்றுகின்றது.

மேற்கண்ட வெறுக்கத்தக்க விஷயங்கள் கலாச்சாரம் மற்றும் சமூக சடங்கு சம்பிரதாயங்களுக்கு உட்பட்டவை. இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை. திருக்குர்ஆனை கருத்தூன்றிப் படித்தால் ஒர் உண்மை விளங்கும்.

மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள் 1970-களில் போராடிப் பெற்ற அனைத்துப் பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இஸ்லாமியப் பெண்கள் ஆன்மிகத்திலும், கல்வியிலும், சொத்துரிமையிலும் ஆண்களுக்கு நிகரான உரிமைப் பெற்றுத் திகழ்கின்றனர். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து அதனை சரிவர வளர்க்கும் பெண்மணி பெரும் பாக்கியம் நிறைந்தவளாகக் கருதப் படுகின்றாள்.

இவ்வாறு இஸ்லாம் பெண்ணினத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் வழங்கி மேன்மைப்படுத்தி இருக்கும்போது, இந்த மேற்கத்திய ஆண்கள் ஏன் முஸ்லிம் பெண்களின் ஆடை விஷயத்தில் மட்டும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்?

பிரிட்டிஷ் அரசின் அமைச்சர்களான கோர்டன் பிரவுன் மற்றும் ஜான் ரீட் ஆகியோர் முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் இருவருமே ஆண்கள் கூட பாவாடை அணியும் ஸ்காட்லாந்து நாட்டு எல்லையோரத்தைச் சேர்ந்தவர்கள்.

நான் இஸ்லாத்திற்கு மாறி முக்காடு அணியத் துவங்கியபோது மிகப்பெரிய அளவில் விளைவுகளை எதிர்கொள்ள நேரிட்டது. நான் செய்ததெல்லாம் எனது தலையையும், தலைமுடியையும் மூடிக் கொண்டேன், அவ்வளவுதான். ஆனால் உடனே நான் இரண்டாந்தர குடிமகளாக்கப்பட்டேன்.

ஏதோ கொஞ்சம் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் இந்தளவிற்கு இனவெறியை நான் எதிர்பார்க்கவில்லை. ''வாடகைக்கு'' என்ற வாசகத்தடன் என்னைக் கடந்து சென்று நின்ற டாக்ஸியிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண் இறங்கினாள்.

நான் அந்த டாக்ஸியில் ஏறுவதற்காக எத்தனித்தேன். ஆனால் என்னைக் கூர்ந்து கவனித்த டிரைவர் என்னை நிராகரித்து விட்டு விருட்டென்று காரை ஒட்டிச் சென்று விட்டான்.

மற்றொரு டாக்ஸி டிரைவரோ என்னிடம் ''பின் ஸீட்டில் வெடிகுண்டு எதையும் வைத்து விட்டுப் போய்விடாதே'' என்றும் ''பின்லேடன் எங்கே ஒளிந்து இருக்கிறான் தெரியுமா?'' என்றும் கமெண்ட் அடித்தான்.

ஆம்! பெண்கள் கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்பது ஒர் இஸ்லாமியக் கடமை. நான் அறிந்தவரை பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் - அதாவது முகம் மட்டும் வெளியில் தெரியும் வண்ணம் உடை அணிகின்றனர். வெகு சிலரே முகத்தையும் மறைக்கும் நிகாப் எனும் முகத்திரை அணிந்து வெளியில் வருகின்றனர்.

என்னைப் பொறுத்தவரை, ஒரு முஸ்லிம் பெண் கண்ணியத்திற்காக ஹிஜாப் அணிகிறாள், அவளுக்கு அந்த கண்ணியத்தைக் கொடுத்து விட்டுப் போங்களேன்! வால் ஸ்டிரீட்டில் இயங்குகின்ற ஒரு வங்கியின் அதிகாரி தன்னை ஒரு சீரியஸான பிஸினஸ்மேனாக பிறர் கருத வேண்டும் என்பதற்காகத்தானே கோட் சூட் அணிகிறார்! - அதுபோலத்தான் இதுவும்.
நான் ஒரு நேரத்தில் மேற்கத்திய பெண்ணிய வாதியாகத்தான் இருந்தேன். ஆனால் பிறகுதான் உணர்ந்தேன்.. முஸ்லிம் பெண்ணியவாதிகள் பிறரைவிட மிகத் தீவிரமாக பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்கள் என்று! அநாகரீகமான அழகிப் போட்டிகளை நாம் வெறுக்கின்றோம். ஆனால் நமக்கு எரிச்சலூட்டும் விதமாக 2003-ல் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஆப்கானிஸ்தானிய பெண் ஒருத்தி நீச்சல் உடையில் பங்கேற்ற நிகழ்ச்சியை அந்தப் போட்டியின் நடுவர்கள் இஸ்லாமியப் பெண்களின் விடுதலைக்கான ஆரம்பம் இது என்று வர்ணித்தனர்.

ஹிஜாப் அணிவது சமூக உறவைப் பேணுவதற்கு மிகவும் தடையாக இருக்கிறது என்று இத்தாலியப் பிரதமர் ப்ரோடி கூறியிருக்கிறார். இந்த முட்டாள்தனமான வாதத்தைக் கேட்கும்போது எனக்கு அழுவதா அல்லது சிரிப்பதா? என்று தெரியவில்லை.

இவர் சொல்வது சரியென்றால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் செல்போன், சாதா போன், பேக்ஸ், எஸ்.எம். எஸ். தகவல்கள் மற்றும் ரேடியோ ஆகியவை அர்த்தமற்றவையாகி விடும். இந்த உபகரணங்களை தொடர்பில் இருப்பவர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டா நாம் உபயோகிக்கிறோம்?

இஸ்லாத்தின் கீழ் நான் மதிக்கப்படுகின்றேன். எனக்குத் திருமணம் ஆகியிருந்தாலும், ஆகாவிட்டாலும் எனக்கு கல்வி கற்க உரிமை உண்டு என்றும், கல்வியைத் தேடிப்பெற வேண்டியது எனது கடமை என்றும் இஸ்லாம் எனக்கு சொல்லித் தருகின்றது.. இஸ்லாத்தின் இந்த கட்டமைப்பிலும் பெண்களாகிய நாங்கள் ஆண்களுக்கு சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற சேவகங்கள் செய்துதர வேண்டும் என்று கட்டளையிடப்படவே இல்லை.

இன்னும் சொல்லப் போனால், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, இனத்தையோ அல்லது தேசத்தையோ சார்ந்தது அல்ல. இது மதம், மொழி, இனம், கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் கடந்து பெண்ணினத்தை பாதித்து வரும் ஒர் உலகளாவிய பிரச்சினையாகும்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்ஸ. National Domestic Violence Survey நடத்திய ஆய்வில் அமெரிக்காவில் 12 மாத கால அளவில் 4 மில்லியன் பெண்கள் ஆண்களது கொடுமைக்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஒரு நாளில் மட்டும் 3 பெண்கள் தங்களது காதலன் அல்லது கணவனால் கொல்லப்பட்டு வருகின்றனர்.

ஆண்கள் தங்கள் மனைவிமார்களை கைநீட்டி அடிக்க அனுமதிக்கிறது இஸ்லாம் என்ற கூற்றை எடுத்துக் கொண்டால் - இது முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் அடிக்கடி குர்ஆன் வசனங்களையும், நபிமொழி குறிப்புகளையும் மேற்கோள் காட்டுகின்றனர்.

ஆனால் அந்த வசனங்கள் மற்றும் நபிமொழிகளின் உள்ளர்த்தங்களை தவறாக விளங்கிக் கொள்வதால் எற்படும் விளைவுதான் இது. ஒர் ஆண் தனது மனைவியை அடிக்கத்தான் வேண்டுமாயின், அவளது உடலில் எவ்விதக் காயமோ அடையாளமோ இல்லாமல்தான் அடிக்க வேண்டும் என்று குர்ஆன் சொல்கிறது.

இது குர்ஆனுக்கே உரிய தனித்துவமிக்க சொல்லாளுமையாகும். இதன் உள்ளர்த்தத்தை நெருக்கமாகச் சொல்லப் போனால்... முட்டாளே! உனது மனைவியை அடிக்காதே!! என்பதுதான்.
இதற்கு மேலும் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி வைக்கிறது என்று வாதிடுவோர்களின் கவனத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்:

அமெரிக்காவின் ஆன்மீகக் குரு ரெவரண்ட் பேட் ராபெர்ட்ஸன் 1992-ல் கூறிய கருத்து இதோ: ''பெண் விடுதலை என்பது சமூக சீர்கேட்டை உருவாக்கி, குடும்ப பாரம்பரியத்தை சீர்குலைத்து, கணவர்களை விட்டு ஒடுகின்ற, தங்கள் குழந்தைகளைக் கொல்கின்ற, ஒரினச் சேர்க்கையில் பெண்களை ஈடுபடுத்துகின்ற ஓர் இயக்கமாகும்''. இப்போது சொல்லுங்கள்! யார் நாகரீகமானவர்கள்? யார் நாகரீகமற்றவர்கள்? என்று.''

(சகோதரி யுவான் ரிட்லி லண்டனில் இயங்கும் இஸ்லாம் சேனல் தொலைக் காட்சியின் அரசியல் எடிட்டர் மற்றும் ''In the Hands of Taliban: Her Extra ordinary Story'' என்ற நூலின் இணையாசிரியர் ஆவார். இந்த நூலாசிரியரை hermosh@aol.com என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 2001-ம் வருடம் இவர் தாலிபான்களிடம் சிக்கி இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொள்ள வைத்த சுவையான சம்பவம் குறித்து இவரது நேரடி பேட்டி அப்போது ''நியூஸ் வீக்'' பத்திரிக்கையில் பரபரப்பாக வெளியாகி இருந்தது)

''Jazaakallaahu khairan'' source: - vapuchi.wordpress.com
Jesmin
 ·  · 

Sunday, 13 May 2012

சமூகநல்லிணக்கம்

சமூகநல்லிணக்கம்  சமூகநல்லிணக்கம்    சமூகநல்லிணக்கம்

SP. பட்டிணம்- மௌலவி-அல்ஹாபிழ்-அல்ஹாஜ்,    அப்துல்கய்யூம் பாகவி  

நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் வாழ்க்கை முழுதும் ,இது போன்ற நிகழ்ச்சிகள் ஏராளமாக உள்ளன. நபியவர்களிடம் வேலைச் செய்த யூத சிறுவன் ஒருவன்,நோய்வாய்ப்பட்டு இருந்தபோது, அவரை நலம் விசாரிக்க அன்னார் சென்ற நிகழ்ச்சி,நபியின் நல்லிணக்கம் மிகுந்த நன் நடத்தையை நினைவூட்டுகிறது.
ஒரு போரிலிருந்து திரும்புகின்ற வழியில் அன்னாருக்கு ஒரு யூதப்பெண் விருந்து கொடுத்த போது அதனை ஏற்றுக்கொண்டு விருந்துண்ண சென்றார்கள், அன்றைய சூழ் நிலையில் முஸ்லிம்களுக்கு பரம விரோதிகள் யூதர்களே; என்ற நிலையிருந்தும், அண்ணலாரின் இந்த சம்மதம்,அன்னாரின் ஐக்கிய உணர்வுக்கு,ஓர் அழகான அடையாளம்,என்று சொல்லலாமல்லவா?.
ஒரு முறை நபிகளாரின் உயிர் நண்பர் அபூ பக்கர் [ரழி] அவர்கள்,யூதர்கள் குழுமியிருந்த இடத்தைக் கடந்து சென்றபோது, சின்ன வாக்குவாதம் ஏற்பட்டு, அபூபக்கர்[ரழி] அவர்கள்,ஃபனுஹாஸ் என்ற ஒரு முக்கிய யூதரை ஓங்கி அறைந்து விட்டார்கள்; இந்த பிரச்சனையை யூதர்கள், நபியவர்களிடம் எடுத்துச்சென்று நியாயம் கேட்டார்கள்; காரணம்; அண்ணலாரின் பாராபச்சமற்ற, பரஸ்பர நடவடிக்கையேயாகும்.
மற்றொரு முறை, ஒரு யூதருக்கும்,முஸ்லிமாக நடித்துக்கொண்டிருந்த ஒருவருக்கும்,நிலம் சம்பந்தமாக ஒரு பிரச்சனை;யூதர்,"முஹம்மதிடம் செல்லாம்,அவர்தான் நியாயமாக தீர்ப்பு வழங்குவார்"எனக் கூறினார். ஆனால் முஸ்லிமாக ஏமற்றிக்கொண்டிருந்த[நயவஞ்சகரான]வர் மற்றவர்களிடம் செல்லலாம்,என அழைத்தார். காரணம்;நபியிடம் சென்றால், நமக்கு நியாயம் கிடைக்கும்.என்று யூதர் நினைத்தார்,ஆனால்;அவர்களிடம் சென்றால்,நமக்கு சாதகமாக[நியாயமின்றி]அவர் தீர்ப்பு வழங்க மாட்டார்.என்று, அந்த நயவ்ஞ்சகர் எண்ணினார்.
இன் நிகழ்ச்சி"மாற்றாரும் கூட முஹம்மத்[ஸல்] அவர்களின் மீது அபார நம்பிக்கை வைத்திருந்தனர்,என்பதை சித்தரிக்கிறது."நீதிக்கு புறம்பாக தனது சமூகத்துக்கு உதவி செய்பவன்,கிணற்றில் விழும் ஒட்டகத்தின் வாலைப்பிடித்தவன் போலாவான்," என்ற தனது பொன் மொழிக்கு இலக்கணமாகவே வாழ்ந்தார்கள், அந்த நபிகள் நாயகம்[ஸல்]அவர்கள்.
நபி (ஸல்)அவர்களின் வாழ்க்கையில் ஒரே இறைவன் என்ற கொள்கையை ஓங்கி ஒலித்தார்களே தவிர, மற்ற மக்களால் தெய்வங்களாக நம்பப்படுகிற எதையும் திட்டியதோ அதனை வசை பாடியதோ கிடையாது.காரணம் இது அன்னாரின் நாகரீகம் என்றும் கூறலாம்,அதே சமயம் அல்லாஹ்வின் கட்டளையும் அதுவாகத்தான் இருந்தது.அல்லாஹ் .கூறுகிறான்:[நம்பிக்கையாளர்களே!]அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் இறைவன் என அழைக்கிறார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள்.[6:108] இவ்வசனத்தின் இலக்கணமாகவே இறைத்தூதர் அவர்கள் வாழ்ந்தார்கள். இஸ்லாம் தனது இனிய அணுகு முறைகளால் நாளுக்கு நாள் வளர்ந்த்து வருவதை பொறுக்க முடியாத எதிரிகள் முஸ்லிம்களுக்கு பல இன்னல்களை தந்தனர்,அவற்றை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயச்சூழ் நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டனர்.அதனால் உண்டானவைதான் அன்றைய போர்கள்.போர் என்றாலே மனிதம் செத்துப்போய் விடும் என்பதை நாம் அறிவோம். அத்தகைய போரிலும் நபியின் போதனை வித்தியாசமாகவும்,விசித்திரமாகவும் இருக்கும்.போருக்கு புறப்படும் வீரர்களை நோக்கி,"அல்லாஹ்வின் அணியினரே!எதிரிகளின் அணியில் இருக்கும் பெண்களையோ, குழந்தைகளையோ,அந்த பகுதியின் ஆலயங்களிலும் கோவில்களிலும் மக்களுக்கு குருக்களாக இருந்து வணக்கம் நடத்துகின்ற மத போதகர்களையோ கொல்லாதீர்கள்.அந்த மக்களின் வணக்க இடங்களை இடிக்காதீர்கள்.அந்த பகுதியின் முன்னேற்றத்திற்கு காரணமாக உள்ள விவசாயங்களை சேதப்படுத்தாதீர்கள்,ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்தவர்களைக் கொல்லாதீர்கள்".என்று உபதேசம் செய்வார்கள்.இவை மட்டுமல்ல. இன்னும் அனேக எடுத்துக்காட்டுகள் உள்ளன்.இவையாவும் நமக்கு போதிக்கும் செய்தி ஒன்றுதான்.அதாவது இஸ்லாம் வன்முறை மார்க்கமல்ல,மாறாக,எல்லா வகையிலும் சமூகத்தின் நல்லிணக்கத்தையும் நன்மையையுமே நம் இலட்சியமாகக் கொள்ளவேண்டும்,என்பதே அந்த செய்தி.இதுவே நம் வழியாக மாறினால் நம் வாழ்வு முழுவதும் ஆனந்தம் பொழியும்,பொழிய வேண்டும்.பாடுபடுவோம் வாருங்கள்! [நல்லிணக்கம் தொடரும்.....]

சங்கை நபியை சத்தியப்படுத்தும் சான்றுகள்

சங்கை நபியை சத்தியப்படுத்தும் சான்றுகள்.




அற்புதம் ஆனால் உண்மை
இன்று முதல் இன்ஷா அல்லாஹ் நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் [ஸல்]அவர்களின் வாழ்க்கையில் நடை பெற்ற முஃஜி ஸா என்னும் அற்புதங்களை தினமும் கூற இருக்கிறோம்,நண்பர்கள் நாம் பதிவு செய்யும் இவற்றில் எதாவது தவறுகள் இருந்தால் தாராளமாக தட்டிக்கேட்க்கலாம்,மாறாக இதற்கு சம்மந்தமில்லாத விஷயங்களை புகுத்தி தானும் குழம்பி பிறரையும் குழப்ப வேண்டாம்! என்பதை மிகவும் தயவோடு கேட்டுக்கொள்கிறோம்,
முஃஜிஸா] அற்புதம் என்றால் என்ன?மனித அறிவுக்கு அப்பாற்பட்டு அவனால் முடியாத ஒன்றை அல்லாஹுத்தஆலா தனது தூதர்களின் மூலம் உலக மக்களுக்கு காட்டி தனது ஆற்றலுக்கு அடையாளமாக வலுப்படுத்தும் அதிசயங்களுக்கு சொல்லப்படும்.
இத்தகைய அதிசயங்களை அநேக இறைத்தூதர்களும் இவ்வுலகில் காட்டியுள்ளனர்,அவ்வாறே நமது நபி முஹம்மது [ஸல்]அவர்களும் அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர்,அவற்றைத்தான் ஆதாரப்பூர்வமாக இங்கு காணப்போகிறோம்.
நபி[ஸல்]அவர்கள் இவ்வுலகில் காட்டிய அற்புதங்கள் 1000,என்றும் சிலர் 3000 என்றும் கூறுகின்றனர்[அல்லாஹ்வே மிக அறிந்தவன்]
இதன் நோக்கம் []நபியின் வாழ்வில் நிகழ்ந்தவைகளில் எல்லாமே படிப்பினைக்குரியவையாக இருந்தும் கூட இவ்வாறான செய்திகளை கூறுவது அருகிவிட்டன காரணம் [தெளிவானது]தேவை இல்லை,[]நபியின் தனித்தன்மைகளை இதன் மூலம் உணர்ந்து நபியின் மீது அதிகமான கண்ணியமும் அன்பும் கொள்வதுதான்.
அல்லாஹ் நமது நல்ல நோக்கங்களை நிறைவேற்றி அருள் புரிவானாக!ஆமீன்.


**குர்ஆன் ஒரு நிரந்தர அற்புதம்**---------------------------------------------நபி [ஸல்]அவர்கள் காட்டிய அற்புதங்களிலேயே பெரும் அற்புதம் குர்ஆன்தான்.காரணம் [1]அன்று இருந்த மொழி நயம் மிகுந்த அரப்களுக்கே சவால் விட்டு இதைப்போன்ற பத்து சூராக்களை,அல்லது ஒரு சூராவை ,அல்லது ஒரு வசனத்தையாவது கொண்டு வாருங்கள்!பார்க்கலாம்.என்று சவால் விட்ட குர்ஆனுக்கு இதுவரை யாரும் பதில் தர முடியவில்லை.

[2]இது வரை இந்த வேதத்திலிருந்து ஒரு புள்ளி கூட மாற்ற முடியாத அளவுக்கு நிரந்தர பாதுகாப்ப்பு.

[3]அன்றைக்கு இருந்த நிகழ் காலம் பற்றி பேசியதை போல வருங்காலம் பற்றியும் தெளிவாக பேசிய அற்புதம்.
[4]இன்று புதிதாக கண்டு பிடிக்கப்படும் அறிவியல்களுக்கும் இது முன்னோடியாக இருப்பது.

[5]எல்லாவற்றுக்கும் மேலாக மனித வாழ்க்கைக்கு பின்னுள்ள மறு உலக வாழ்க்கைப் பற்றி தெளிவாக பேசுவது.
இன்னும் எத்தனையோ தனிச்சிறப்புகள் அதன் அற்புதத் தன்மைக்கு அடையாளங்களாக உள்ளன.

படிப்பினை:இறை மறை குர்ஆனுக்கு எவ்வளவு அந்தஸ்து உள்ளதோ அவ்வாறே அதை பின்பற்றினாலும் அல்லாஹ் பெரிய அந்தஸ்தை தருவான்.குர்ஆன் பாதுகாக்கப்பட்ட வேதம் அதை பின்பற்றுபவர்களையும் அது பாதுகாக்கும் இதை உணராததால்தான் இன்றைய பிரச்சினைகளே
SP.பட்டிணம்
 மௌலவி,அல்ஹாபிழ், அல்ஹாஜ், அப்துல்கய்யூம் பாகவி