Wednesday, 23 July 2014


27th NIGHT PROGRAM  IN MASJID INDIA PETALING JAYA (AKM)

1.SOLAT ISHA.8-55PM

2.SOLAT TARAWEEH.9-10PM

3.ZIKIR MAJLIS.10-30PM

4.BAYAN KHAS.11-00PM

5.REHAT.11-30PM to 12-30AM

6.SOLAT TASBEEH.12-35AM

7.TADARUSUL QUR`AAN.1-15AM

8.REHAT.2-30AM to 2-55AM

9.QIYAMULLAIL.3-00AM

10.MAKANAN SUHUR.4-15AM

          by AKM

Monday, 7 January 2013

சமையல் அறையில் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி ?


கியாஸ் சிலிண்டரை எப்படி உபயோகிப்பது என்பது பற்றி ஒவ்வொரு குடும்பத்தினரும் அறிந்திருக்க வேண்டும், விலை மதிப்பற்ற மனித உயிர் இழப்பை தவிர்க்க பாதுகாப்பான முறையில் சமையல் அறையை பெண்கள் கையாள வேண்டும். எண்ணை நிறுவனங்கள் சமையல் கியாஸ் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அவற்றை நாம் அலட்சியமாக கருதி பின்பற்றுவது இல்லை. அதனால்தான...் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன என்று இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சமையல் கியாசை பாதுகாப்பாக பயன்படுத்த அதிகாரிகள் தரும் விளக்கம் வருமாறு:-

கியாஸ் அடுப்பை பயன்படுத்துபவர்கள் நம்பிக்கையான நிறுவனங்களின் பி.ஐ.எஸ். சான்று பெற்ற சாதனங்களை எப்போதும் பயன்படுத்த வேண்டும். அதிகாரப்பூர்வமான கியாஸ் ஏஜென்சிகளிடம் இருந்தே பி.ஐ.எஸ். சான்று பெற்ற கியாஸ் ரெகுலேட்டர் மற்றும் பாதுகாப்பு டியூப்களை வாங்க வேண்டும். சமையல் கியாசை பாதுகாப்பாக பயன்படுத்தும் முறை பற்றி தெரியாவிட்டால் சிலிண்டர் வினியோகிக்கும் நபரிடம் செயல்முறை விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

காற்றோட்டமான பகுதியில், தரையில் இருந்து நின்ற நிலையிலேயே எப்போதும் சிலிண்டரை வைத்திருக்க வேண்டும். சிலிண்டர் மட்டத்தில் இருந்து உயரமான - சமமான இடத்திலேயே கியாஸ் அடுப்பை வைக்கவும் தனிப் பெட்டியிலோ அல்லது தரை மட்டத்தில் இருந்து பள்ளமான குழியிலோ சிலிண்டரை வைக்கக்கூடாது.

வெப்பமான பிற சாதனங்களில் இருந்து சிலிண்டரை தள்ளியே வைத்திருக்க வேண்டும். சிலிண்டரை பயன்படுத்தும் போது அதன் அருகில் மண்எண்ணை அல்லது வேறு வித அடுப்புகளை ஒரு போதும் வைத்திருக்கக்கூடாது. ரப்பர் டியூப், சிலிண்டர் வால்வின் உள்புறத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சிலிண்டரில் கசிவு இருப்பதை சோப்பு நீர் கொண்டே பரிசோதியுங்கள். எரியும் தீக்குச்சி மூலம் பரிசோதிக்கக் கூடாது.

நைலான் கயிற்றுடன் கூடிய பாதுகாப்பு மூடி எப்போதும் சிலிண்டரிலேயே பிணைக்கப்பட்டு இருக்க வேண்டும். கியாஸ் கசிவு தென்பட்டால் பாதுகாப்பு மூடியால் வால்வை மூட வேண்டும். அடுப்பில் பாத்திரங்களை வைத்து விட்டு நீண்ட நேரம் கவனிக்காமல் விட்டு விடாதீர்க்ள. சமையல் பொருட்கள் கொதித்து வெளியேறி தீயை அணைத்து விடும். இது கியாஸ் கசிவுக்கு வழி வகுக்கும்.

பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களை சமையல் அறைக்குள் வைத்திருக்கக் கூடாது. அதனால் ஏற்படும் மின் அழுத்த ஏற்றத்தாழ்வு, கியாஸ் கசிவு இருக்கும் பட்சத்தில் விபத்தை உண்டாக்கக் கூடும். படுக்கைக்கு செல்லும் முன் சிலிண்டர் ரெகுலேட்டர் “நாப்”பை மூடிவிட்டு அடுத்ததாக அடுப்பின் “நாப்”களையும் மூட வேண்டும். பயன்பாடு இல்லாத நேரத்தில் சிலிண்டரின் “நாப்” எப்போதும் மூடிய நிலையிலேயே இருக்க வேண்டும்.

காலியான சிலிண்டர்களை பாதுகாப்பு மூடியால் மூடி, காற்றோட்டமான குளுமையான இடத்திலேயே வைத்திருக்க வேண்டும். கியாஸ் டியூப்பை எதனாலும் மூடாமல் வெளியே தெரியும்படி வைக்க வேண்டும். டியூப்பை விரிசல் இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதித்திடுங்கள். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரப்பர் டியூப்பை மாற்ற வேண்டும். சமையல் எரிவாயு சாதனங்களை அவ்வப்போது பரிசோதித்து சரி செய்து கொள்ள வேண்டும்.

நீங்கள் சுயமாக ரிப்பேர் செய்வது பாதுகாப்பாற்றது. வினியோகஸ்தர்களின் மெக்கானிக்குகளை பயன்படுத்துங்கள். கியாஸ் கசிவு ஏற்பட்டால் பதட்டம் அடையாமல் ரெகுலெட்டர் மற்றும் பர்னர் “நாப்”களை மூட வேண்டும். அந்த அறையில் உள்ள மின் சுவிட்சுகள், மின் சாதனங்களை இயக்கக்கூடாது வெளிப்புறம் இருக்கும் பிரதான மின் இணைப்பில் இருந்து மட்டுமே மின் சப்ளையை துண்டிக்க வேண்டும். காற்றோட்டத்துக்காக கதவுகள், ஜன்னல்களை திறந்து வைக்கவும் எரியும் நெருப்பு, எண்ணை விளக்குகள், மெழுகுவர்த்தி போன்றவற்றை அணைத்திட வேண்டும். சிலிண்டரை பாதுகாப்பு மூடியால் மூடிவிடுங்கள். உதவிக்கு உங்களின் வினியோகஸ்தர் அல்லது அவசர சேவை மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

காற்றை விட கியாஸ் கனமானதாக இருப்பதால் கசிவு ஏற்படும் நேரத்தில் அது தரைமட்டத்தை நோக்கி பாயும். கியாஸ் கசிவு ஏற்பட்டிருப்பது கவனத்துக்கு வந்தால் அவற்றை வெளியேற்ற அத்தனை காற்றோட்ட வசதிகளையும் செய்யவும்.

நன்றி : ஐ.ஓ.சி. நிறுவனம்
See More

Saturday, 5 January 2013

யார் தன் பொருளின் மீது மட்டுமே நம்பிக்கை வைப்பாரோ அவர் சிறுமை அடைவார்,


யார் தன் பொருளின் மீது மட்டுமே நம்பிக்கை வைப்பாரோ அவர் சிறுமை அடைவார், யார் தன் அதிகாரத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வைப்பாரோ கேவலமடைவார், யார் தன் அறிவின்மீது மட்டுமே நம்பிக்கை வைப்பாரோ  ஏமாற்றமடைவார், யார் தன் செயலின் மீது மட்டுமே நம்பிக்கை வைப்பாரோ வழி தவறிவிடுவார், யார் மக்களின் மீது மட்டுமே நம்பிக்கை வைப்பாரோ சோர்ந்து விடுவார், யார் அல்லாஹ்வின் மீது மட்டுமே நம்பிக்கை வைக்கிறாரோ அவர் சிறுமைஅடையமாட்டார்-கேவலமடையமாட்டார்- ஏமாற்றமடையமாட்டார்-வழிதவறமாட்டார்-சோர்வடையவும்மாட்டார்!  

Tuesday, 1 January 2013

கவலை நீங்க வேண்டுமா?நெருக்கடி நீங்க வேண்டுமா?முக அழகு வேண்டுமா?

BY,SP-PATTINAM-SUNDARAI SADAK MAINTHAN.  
                                                        
உடல் நலம் வேண்டுமா?நோன்பு வையுங்கள்!
முக அழகு வேண்டுமா?தஹஜ்ஜுத் தொழுங்கள்!
உயர்ந்த வாழ்வு வேண்டுமா?குர்ஆனை அழகு பட ஓதுங்கள்!
...
நற்பாக்கியம்வேண்டுமா?நேரம் தவறாது தொழுங்கள்!
மகிழ்ச்சி வேண்டுமா?பாவமன்னிப்பு தேடுங்கள்!
கவலை நீங்க வேண்டுமா?அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்!
நெருக்கடி நீங்க வேண்டுமா?”லாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லா”அதிகம் ஓதுங்கள்!
வாழ்வில் அபிவிருத்தி வேண்டுமா? சலவாத் ஓதுங்கள்!
கஷ்டப்படாமல் நன்மை வேண்டுமா?-இதை நண்பர்களுக்கு அனுப்புங்கள்
!See More
என்ன வேண்டும் உங்களுக்கு?
*************************
உடல் நலம் வேண்டுமா?நோன்பு வையுங்கள்!
முக அழகு வேண்டுமா?தஹஜ்ஜுத் தொழுங்கள்!
உயர்ந்த வாழ்வு வேண்டுமா?குர்ஆனை அழகு பட ஓதுங்கள்!
நற்பாக்கியம்வேண்டுமா?நேரம் தவறாது தொழுங்கள்!
மகிழ்ச்சி வேண்டுமா?பாவமன்னிப்பு தேடுங்கள்!
கவலை நீங்க வேண்டுமா?அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்!
நெருக்கடி நீங்க வேண்டுமா?”லாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லா”அதிகம் ஓதுங்கள்!
வாழ்வில் அபிவிருத்தி வேண்டுமா? சலவாத் ஓதுங்கள்!
கஷ்டப்படாமல் நன்மை வேண்டுமா?-இதை நண்பர்களுக்கு அனுப்புங்கள்!

()*-ஒரு காலத்தில் அசுத்தத்துளியாக இருந்து நாளை பிணமாக போகும் இவன் பெருமையடிப்பதை கண்டு ஆச்சரியப்படுகிறேன்

 
S.P.Abdul Qayyoom Baqavi.
தொகுத்தவை
 சையிதுனா உமர்[ரழி]அவர்கள் கூறுகிறார்கள்:()*-அல்லாஹ்வின் படைப்புகளை கண்டும் அவனை சந்தேகப்படும் மனிதனைக்கண்டு ஆச்சரியமடைகிறேன்,
()*-மரணித்தவர்களை தினமும் காணும் மனிதன் தன் மரணத்தை மறந்திருப்பதைக்கண்டு ஆச்சரியமடைகிறேன்,
()*-தனது இவ்வுலகின் உருவாக்கத்தைக்காணும் மனிதன் தாம் மறுபடி எழுப்பப்படுவதை மறுப்பதை கண்டு ஆச்சரியப்படுகிறேன்,
()*-மனிதன் நிரந்தர உலகுக்காக முயல்வதை விட்டு விட்டு அழியும் இவ்வுலகிற்காக மட்டும் சிரமப்பட்டு உழைப்பதைக்கண்டு ஆச்சரியப்படுகிறேன்,
()*-ஒரு காலத்தில் அசுத்தத்துளியாக இருந்து நாளை பிணமாக போகும் இவன் பெருமையடிப்பதை கண்டு ஆச்சரியப்படுகிறேன்


ஆச்சரியம்! பேராச்சரியம்!!
***********************
சையிதுனா உமர்[ரழி]அவர்கள் கூறுகிறார்கள்:
()*-அல்லாஹ்வின் படைப்புகளை கண்டும் அவனை சந்தேகப்படும் மனிதனைக்கண்டு ஆச்சரியமடைகிறேன்,
()*-மரணித்தவர்களை தினமும் காணும் மனிதன் தன் மரணத்தை மறந்திருப்பதைக்கண்டு ஆச்சரியமடைகிறேன்,
()*-தனது இவ்வுலகின் உருவாக்கத்தைக்காணும் மனிதன் தாம் மறுபடி எழுப்பப்படுவதை மறுப்பதை கண்டு ஆச்சரியப்படுகிறேன்,
()*-மனிதன் நிரந்தர உலகுக்காக முயல்வதை விட்டு விட்டு அழியும் இவ்வுலகிற்காக மட்டும் சிரமப்பட்டு உழைப்பதைக்கண்டு ஆச்சரியப்படுகிறேன்,
()*-ஒரு காலத்தில் அசுத்தத்துளியாக இருந்து நாளை பிணமாக போகும் இவன் பெருமையடிப்பதை கண்டு ஆச்சரியப்படுகிறேன்

நம் கப்ரு [புதைகுழி] நம்மை விழுங்க தயாராய் இருக்கிறது,

பிறந்தவர் ஒவ்வொருவரும் 
இறந்தே ஆக வேண்டும் -ஆனால் 
அது எப்போது?
நாம் வாழ்வை நோக்கி
வேகமாய் ஓடுகிறோம் 
நம் கப்ரு[புதை குழி]நம்மை விழுங்க தயாராய் இருக்கிறது,
சந்தோஷ மிதப்பில் சந்திக்க போகும் 
மறுமையை மறப்பது மடமை.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் நவின்றார்கள்!
மிகச்சிறந்த அறிவாளி என்பவர் தன்னை அறிந்து, மரணத்திற்குப்பின்
உள்ள வாழ்க்கைக்காக செயல்படுபவரே!

அந்த இன்பங்களில் மிகச்சிறந்தது

உலகம் என்பது அற்ப இன்பமாகும்
அந்த இன்பங்களில் மிகச்சிறந்தது
நல்ல மனைவியாவாள்
[நபி மொழி]
By,s.p.pattinam Abdul Qayyoom Baqavi