Friday, 28 December 2012

தாரிக் இப்னு ஸியாத். - Tharik bin Ziyad

தாரிக் இப்னு ஸியாத். - Tharik bin Ziyad
மத்தியத் தரைக்கடல் வழியாக அட்லாண்டிக் மகா சமுத்திரத்திற்குள் நுழையும் ஒவ்வொரு கப்பலும் ஜிப்ரால்டர் ஜலசந்தியைக் கடந்தே ச...ென்றாக வேண்டும் அல்லது அங்கு சிறிது தாமதித்து இளைப்பாறிச் செல்ல வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த ஜிப்ரால்டர் ஜலசந்தியானது ஐரோப்பாவின் தென்மேற்கு முனையில் மற்றும் மொராக்கோவுக்கு எதிர்புறமாக அமைந்துள்ளது.

சரி..! ஜிப்ரால்டர் என்று ஏன் அழைக்கப்படுகின்றது என்று தெரியுமா உங்களுக்கு? ஜிப்ரால்டர் என்பது ஜபல் அல் தாரிக் அல்லது ''தாரிக்(இப்னு ஸியாத்)மலைக்குன்று'' என்பதனை மொழிமாற்றி, சுருங்கச் சொல்லப் பொன்னால் அரபி மொழியை மோசடி செய்து, அதனை ஜிப்ரால்டர் என்று மேற்குலகு அழைத்துக் கொண்டிருக்கின்றது. இது நாம் காணப் போகும் வரலாற்று நாயகரான தாரிக் இப்னு ஸியாத் அவர்களின் பெயரைத் தாங்கித் தான் நிற்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய வரலாற்றுச் சிறப்புக்குச் சொந்தக்காரரைப் பற்றி நாம் இங்கு சிறிது காண்போமா..!

வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள பெர்பர்களின் வம்சாவழியில், நஃப்ஸாவா என்னும் குலத்தில் தோன்றியவர் தான் தாரிக் பின் ஸியாத். உக்பா இப்னு நாஃபி அல் ஃபிஹ்ரி என்பவரின் தலைமையில் சென்ற முஸ்லிம்களின் படை வடக்கு ஆப்ரிக்காவைக் கைப்பற்றிய பொழுது, அதன் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவர் தான், தாரிக் இப்னு ஸியாத் தந்தை. தந்தை இறந்ததன் பின்பு, வாழ்க்கையின் வசந்த காலத்தில் வீற்றிருந்த தாரிக் பின் ஸியாத் அவர்கள், தன்னுடைய இளமைக்காலத்தை வடக்கு ஆப்ரிக்க முஸ்லிம் படையில் இணைந்து தனது உன்னத சேவையை ஆரம்பித்தார். இளமையின் வேகம்.., அதனுடன் இணைந்த இறைநம்பிக்கையின் உறுதி, இவை ஆப்ரிக்க மக்களின் மனங்களில் இஸ்லாத்தின் தூதுத்துவத்தை நிரப்புவதற்கான பணிகளில் முனைப்புடன் இவரை ஈடுபட வைத்தது.

தாரிக் இப்னு ஸியாத் அவர்களின் இளமைக்கால அர்ப்பணிப்புகளால் கவரப்பட்ட ஆட்சியாளர் மூஸா இப்னு நுஸைர், டேன்ஜியர் என்ற பகுதிகளை ரோமர் வசமிருந்து கைப்பற்றிக் கொண்டவுடன் அந்தப் பகுதிக்கு, அதாவது இன்றைய மொராக்கோ பகுதிக்கு தாரிக் பின் ஸியாத் அவர்களை ஆளுநராக நியமித்தார். ரோமப் பேரரசின் சியூடா பகுதிக்கு கவர்னராக இருந்த ஜுலியன் அவர்களைச் சந்தித்துப் பேசும் அதிகாரத்தை ஆட்சியாளர் மூஸா பின் நுஸைர் அவர்கள் தாரிக் பின் ஸியாத் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் புதிய அத்தியாயம் ஒன்று ஆரம்பமானது.

ஸ்nபியினின் உண்மையான ஆட்சியாளர்களிடமிருந்து, ரோட்ரிகஸ் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டது முதல் ஸ்பெயினில் கொடுமையான ஆட்சி முறை அரங்கேற ஆரம்பித்தது என்று ஸ்பெயின் வரலாறு கூறுகின்றது. நாம் ஏற்கனவே பார்த்த கவர்னர் ஜுலியன், தன்னுடைய மகளை டொலிடோ நகரில் அமைந்துள்ள ஸ்பானிஸ் அவைக்கு தனது மகளை கல்வி கற்றுக் கொள்வதற்காக அனுப்பி வைத்திருந்தார். அரச வம்சத்தவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற இங்கிதம் கூடத் தெரியாத ரோட்ரிகஸ், ஜுலியன் மகளைக் கைது செய்து சிறையிலடைத்து விட்டார். தனது மகள் சிறையிலடைக்கப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்ட ஜுலியன் சினத்தால் கொதித்தெழுந்தார். ரோட்ரிகஸ் மன்னனுக்கு சரியான பாடம் கற்பித்துக் கொடுக்க விரும்பிய ஜுலியன், தங்களுக்கு மிகவும் சமீபமாகவும், இன்னும் வடக்கு ஆப்ரிக்கா தேசம் முழுவதையும் தங்களது ஆளுகையின் கீழ் கொண்டு வந்திருக்கின்ற அரபுக்களிடமிருந்து உதவியைப் பெற்று அதன் மூலம் ரோட்ரிகஸ் மன்னனுக்கு பாடம் கற்பித்துக் கொடுக்க விரும்பிய ஜுலியன், தன்னுடைய திட்டத்திற்காக ஸ்பானிஷ் அரசவை அங்கத்தவர்களை சம்மதிக்கவும் வைத்து விட்டார்.

எனவே, இது குறித்த திட்டத்தை ஜுலியன் தாரிக் இப்னு ஸியாத் அவர்களிடம் கலந்தாலோசனை செய்த பொழுது, இது குறித்த விஷயத்தை தன்னுடைய அமீரும் துனிசியாவின் ஆட்சியாளராகவும் உள்ள மூஸா பின் நுஸைர் அவர்களிடம் பேசும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

இதற்கு முன்னதாகவே, ஸ்பெயினின் ஊடாக இஸ்லாத்தை எவ்வாறு எடுத்துச் செல்வது என்ற திட்டம் ஒன்று குறித்து, மூஸா பின் நுஸைர் அவர்களும் தாரிக் பின் ஸியாத் அவர்களும் கலந்தாலோசனை செய்து, அதற்கான திட்டத்தை எவ்வாறு வரையறை செய்து கொள்வதென்ற ஆலோசனையில் இருந்தனர்.

இந்த நிலையில், ஜுலியன் அவர்களது வேண்டுகோளானது, ஸ்பெயினைப் பற்றி அறிந்து கொள்வதற்கானதொரு நல்வாய்ப்பை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த நிலையில், ஸ்பெயின் மீது படையெடுப்பு நடத்துவதற்குண்டான சம்மதத்தைப் பெற்றுக் கொள்வதற்காக முழு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைமைப்பீடமாக அன்றிருந்த சிரியாவின் டமாஸ்கஸ் நகருக்கு ஒரு கடிதம் ஒன்றை, மூஸா பின் நுஸைர் அவர்கள் அனுப்பி வைத்தார்கள். போர்க்கலைகளில் நல்ல அனுபவம் வாய்ந்த கலீஃபா அவர்கள், மூஸா பின் நுஸைர் அவர்களின் திட்;டத்தினை அங்கீகரித்து, படையெடுப்பு நடவடிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்ததோடு, சில ஆலோசனைகளையும் வழங்கினார். அதன்படி, முழுமையான போர் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக சிறு படை ஒன்றை ஸ்பெயினுக்கு அனுப்பி வைத்து, நிலைமைகளை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தினார்.

இந்த ஆலோசனையின் அடிப்படையில், தரீஃப் என்பவரது தலைமையில் 400 வீரர்கள் கொண்டதொரு சிறு படையொன்று தயார்படுத்தப்பட்டது. இந்த முதல்படை வெற்றிகரமாகச் சென்று திரும்பி வந்தது. இந்த முதல் படையெடுப்பு வெற்றிகரமாக அமைந்து விட்டதையடுத்து, முழுமையான நுழைவுக்கான தயாரிப்பு ஆரம்பமானது.

இந்த நிலையில், ஜுலியன் அவர்களது வேண்டுகோளானது, ஸ்பெயினைப் பற்றி அறிந்து கொள்வதற்கானதொரு நல்வாய்ப்பை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த நிலையில், ஸ்பெயின் மீது படையெடுப்பு நடத்துவதற்குண்டான சம்மதத்தைப் பெற்றுக் கொள்வதற்காக முழு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைமைப்பீடமாக அன்றிருந்த சிரியாவின் டமாஸ்கஸ் நகருக்கு ஒரு கடிதம் ஒன்றை, மூஸா பின் நுஸைர் அவர்கள் அனுப்பி வைத்தார்கள். போர்க்கலைகளில் நல்ல அனுபவம் வாய்ந்த கலீஃபா அவர்கள், மூஸா பின் நுஸைர் அவர்களின் திட்;டத்தினை அங்கீகரித்து, படையெடுப்பு நடவடிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்ததோடு, சில ஆலோசனைகளையும் வழங்கினார். அதன்படி, முழுமையான போர் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக சிறு படை ஒன்றை ஸ்பெயினுக்கு அனுப்பி வைத்து, நிலைமைகளை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தினார்.

இந்த ஆலோசனையின் அடிப்படையில், தரீஃப் என்பவரது தலைமையில் 400 வீரர்கள் கொண்டதொரு சிறு படையொன்று தயார்படுத்தப்பட்டது. இந்த முதல்படை வெற்றிகரமாகச் சென்று திரும்பி வந்தது. இந்த முதல் படையெடுப்பு வெற்றிகரமாக அமைந்து விட்டதையடுத்து, முழுமையான நுழைவுக்கான தயாரிப்பு ஆரம்பமானது. இந்த முதன்மைப் படைக்கு தாரிக் பின் ஸியாத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, அவரது தலைமையின் கீழ் 5000 வீரர்கள் போர் செய்வதற்குத் தயார் செய்யப்பட்டு, ஸ்nபியினின் முடியாட்சியைக் காக்கும் பொறுட்டு களமிறங்கத் தயாராக இருந்தனர். தாரிக் பின் ஸியாத் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கென, பெர்பர்கள் மற்றும் அரபுகளைக் கொண்ட சிறப்பு ஆலோசனைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. மேலும், இந்தப் படைகள் யாவும் ஸ்பெயினின் கடற்கரையை அடைவதற்கு உதவியாக, ஜுலியன் தனது கப்பல் படைகளைக் கொடுத்து உதவியதோடல்லாமல், அவனே முன்னின்று ஸ்பெயின் நாட்டினுள் படைநகர்வதற்குண்டான வழியையும் காட்டிச் சென்றான். மேலும், இந்தக் கடற்போரானது பல வகையிலும் முக்கியத்துவம் பெற்றதாகவும், போர் வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற திட்டமிடலையும் கொண்டதாகவும் அமைந்து விட்டது. அதன் காரணமென்னவெனில், முஸ்லிம் படைகள் தங்களது சொந்த கப்பலின் மூலமாக ஸ்பெயின் கடற்கரையை அடைந்திருந்தார்களென்றால், எதிரிகளின் கண்களுக்கு மிகவும் எளிதாக இவர்களது வருகை தெரிந்திருக்க வாய்ப்பிருந்தது. இந்த வாய்ப்பை எதிரிகள் இழந்ததோடல்லாமல், முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாக படையை நகர்த்தாமல், சிறிய சிறிய கும்பலாக கடலைக் கடந்து பின் ஸ்பெயினுக்குள் சென்று, அங்கிருந்ததொரு குன்றின் கீழ் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டனர். இந்தக் குன்று தான் இன்றைக்கு ஜிப்ரால்டர் (தாரிக் குன்று - ஆழரவெ ழக வுயசஙை) என்றழைக்கப்படுகின்றது. இந்தச் சாதனையை முஸ்லிம்கள் ஹிஜ்ரி 92 ல் அதாவது கி.பி.711 ல் நடத்திக் காட்டினர்.

இந்தப் போரின் முக்கியத்துவத்தையும், அதில் ஈடுபட்ட வீரர்களின் உளப்பாங்கையும் ஒருங்கிணைப்பதற்காக முஸ்லிம்களின் படைத்தளபதியாகிய தாரிக் பின் ஸியாத் அவர்கள் கையாண்ட முறைதான் இன்றைக்கும் போர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்பட்டு, காலங் கடந்தபின்பும் ஞாபகமூட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது

வீரர்கள் அனைவரும் கப்பலில் இருந்து இறங்கியவுடன், அவர்களைச் சுமந்து வந்த கப்பல்கள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தி விடுமாறு தாரிக் பின் ஸியாத் அவர்கள் தனது படையினருக்குக் கட்டளையிட்டார்கள். அதன்படியே அந்தக் கப்பல்கள் யாவும் ஐபீரியன் தீபகற்பத்தில் வைத்துக் கொளுத்தப்பட்டது. அதன்பின் வீரர்களிடையே தாரிக் பின் ஸியாத் அவர்கள் ஒரு உணர்ச்சிப்பூர்வமான உரை ஒன்றை நிகழ்த்தினார்கள்.

ஓ என்னருமை மக்களே..! யுத்த பூமிக்கு வந்திருப்பவர்களே..! உங்களுக்குப் பின்னால் கடல்.., உங்களுக்கு முன்னால் நிற்பதோ எதிரிகள்..! யுத்தம் ஒன்றே இப்பொழுது மிச்சம்..! இறைவன் மீது சத்தியமாக..! (இந்த நிலையில் நீங்கள்) பொறுமையோடும் இன்னும் இறைநம்பிக்கையில் உறுதியோடும் இருப்பதை அன்றி வேறெதுவும் உங்களுக்கு உதவப் போவதில்லை. வெற்றி அல்லது வீரமரணம், இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளுங்கள் என்றார்.

ரமளான் மாதம் 28 ம் நாள் ஞாயிற்றுக் கிழமை, அதவாது கி.பி. ஜுலை, 19, 711 அன்று, முஸ்லிம் படைகள் தாரிக் பின் ஸியாத் அவர்களின் தலைமையின் கீழும், ஸ்பானியப் படைகள் ரோட்ரிகஸ் தலைமயின் கீழும் களமிறங்கினர். இப்பொழுது முஸ்லிம்களுக்கு உதவுவதற்காக மேலும் 5000 பேர் கொண்ட படையை, முஸ்லிம்களுக்குச் சொந்தமான கப்பலிலேயே அனுப்பி வைக்கப்பட்டனர். இப்பொழுது ஜுலியன் தலைமையின் கீழ் இயங்கும் ஸ்பானியப் படையினர் முஸ்லிம்களைப் பற்றிய நன்மதிப்பை தங்களது சொந்த நாட்டு மக்கள் மத்தியில் பரப்ப ஆரம்பித்தனர்.

முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பாளர்களும் அல்லர் அல்லது நம்மை ஆக்கிரமித்து தங்களது சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த வந்தவர்களுமல்லர். மாறாக, அவர்கள்.., சாந்தியையும் சமாதானத்தையும் இன்னும் விடுதலையையும் பெற்றுத் தருவதற்காக வந்துள்ள சமாதானத்தூதுவர்கள் என்ற நற்சான்றினை மக்கள் மத்தியில் பரப்பினார்கள்.

இந்தச் செய்தியானது ரோட்ரிகஸ் தலைமையின் கீழ் வந்திருந்த இராணுவத்தினரிடையே நல்ல தாக்கத்தினை ஏற்படுத்தியது. ரோட்ரிகஸ் தலைமையின் கீழ் வந்திருந்த ஸ்பானிய வீரர்கள் படையிலிருந்து பின்வாங்க ஆரம்பித்தனர். ஸ்பானியப் படைகளுக்குள் இப்பொழுது குழப்பம் ஆரம்பமானது. குழப்பத்தின் விளைவாக ஸ்பானிய வீரர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள படையை விட்டும் விலகி ஓடினார்கள். இருப்பினும், போர் தொடர்ந்தது, இறுதியில் படைகளை விட்டு விட்டு ரோட்ரிகஸ் தப்பி ஓடி விட்டான். இதன் மூலம் ஐபீரியன் தீபகற்பத்தில் முஸ்லிம்களின் முதல் போர் வெற்றிகரமாக முடிந்தது. இதன் பின் மீண்டும் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து படைகள் ஸ்பெயினுக்குள் வந்து குவிந்தார்கள். இந்த முறை மூஸா பின் நுஸைர் அவர்களே நிவாரணப் படையை முன்னின்று நடத்தி வந்தார்கள்.

படை எடுப்பு நடத்தி வந்த 14 மாதங்களுக்குள் ஸ்பானிய தேசத்தின் மிக முக்கிய நகரங்களான டொலிடோ, செவில்லி, மோர்டா மற்றும் பல நகரங்கள் முஸ்லிம்களின் கைவசமாகின. இன்னும் இரண்டே வருடத்தில் குறிப்பாக அனைத்து ஸ்பானிய நகரங்களும் முஸ்லிம்களின் கைவசம் ஆகின. இந்த நிலை கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் தொடர்ந்தன.

முஸ்லிம்களின் இந்தப் படையெடுப்பின் மூலமாக, ஐரோப்பாவானது இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல, முஸ்லிம்களின் மூலமாக கலாச்சாரப் புத்துணர்வைப் பெற்றுக் கொண்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள். இதன் மூலம், சீனாவின் கிழக்குப் பகுதி முதல், இந்தியாவின் மேற்குப் பகுதி உண்டான பகுதிகள் உள்ளிட்ட நிலப்பகுதிகள் மற்றும் அவர்கள் தங்கள் மேன்மையான கலாச்சாரத்தை அட்லாண்டிக் பெருங்கடல் வரைக்கும் கொண்டு வந்தார்கள்.

முஸ்லிம்களின் ஆளுகையின் கீழ் ஸ்பெயின் வந்ததன் பின், நிர்மாணிக்கப்பட்ட இஸ்லாமியக் கல்விக் கூடங்களிலிருந்து கல்வியைக் கற்றுக் கொள்வதற்காக ஐரோப்பாவின் அறிஞர்கள் விரைந்தனர். இதன் மூலம் பல அறிஞர்களை உருவாக்கிய பெருமையை முஸ்லிம்களின் கல்விக் கூடங்கள் பெற்றுக் கொண்டன.

இன்றைக்கு ஸ்பெயின் முஸ்லிம்களின் கரங்களிலிருந்து சென்று விட்டாலும், ஐரோப்பிய உலகத்திற்கு நாகரீகத்தை வழங்கியதற்காகவும், வரலாற்றுச் சிறப்பு மிக்க தளங்களை விட்டுச் சென்றமைக்காகவும், அதாவது கிரணடா, கார்டோபா, செவில்லி மற்றும் பல நகரங்களில் இன்றளவும் முஸ்லிம்கள் ஏற்படுத்திய வரலாற்றுச் சுவடுகள் நினைவுச் சின்னங்களாக நிலைத்து நின்று கொண்டிருக்கின்றன. இதற்காக அவர்கள் என்றென்றும் முஸ்லிம்களுக்கு நன்றிக் கடன் செலுத்தக் கடமைப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். இந்த வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பார்வையிடுதற்காக வருடந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நகரங்களுக்கு வந்து சென்ற வண்ணம் இருக்கின்றார்கள்.

இத்தகைய அழியாத வரலாற்றுச் சுவடுகளை ஏற்படுத்தி விட்டுச் சென்றமைக்கான காரணகர்த்தவாக, இன்றளவுக்கும் வரலாற்று நாயகராக தாரிக் பின் ஸியாத் நினைவு கூறப்பட்டுக் கொண்டிருக்கின்றார். அதுமட்டுமல்ல, இஸ்லாமிய நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் ஸ்பெயின் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் சென்றதில், தாரிக் பின் ஸியாதின் பங்கு மகத்தானது.

ஆம்..! காரிருள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த ஐரோப்பாவுக்கு இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகளை அறிமுகப்படுத்தி வைத்த பெருமை தாரிக் பின் ஸியாத் அவர்களையே சாரும்

Thursday, 20 December 2012

பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்

சிறிய அடையாளங்கள்

அமானிதங்கள் தன் இலாபப் பொருளாக கருதப்படும்,
ஜகாத் [ஏழை வரி]கடனாக நினைக்கப்படும்,
மகளின் தயவில் தாய் வாழுதல்.
பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்
குடிசைகள் கோபுரமாகும்
மது பல பெயர் சொல்லி அழைக்கப் படும்,
விபச்சாரமும் மதுப்பழக்கமும் பெருகும்
தகுதியற்றவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்.
பாலை வனம் சோலை வனமாகும்.
காலம் சுருங்குதல்
கொலைகள் பெருகுதல்
நில அதிர்வுகளும் பூகம்பங்களும் அதிகரித்தல்
பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
பள்ளிகளில் கூச்சல்கள் அதிகமாகுதல்.
நெருக்கமான கடை வீதிகள் உண்டாகி விடுதல்.
பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருத்தல்.
உயிரற்ற பொருட்கள் பேசுதல்
பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்.
தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்.
பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்.
சாவதற்கு ஆசைப்படுதல்.
இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள் உருவாக்கி விடுதல்.
முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்
பின்னவர்கள் முன்னவர்களை ஏசுதல்.
பெற்றோரை ஒதுக்கி,நண்பர்களை சேர்த்துக் கொள்வது,
ஆடல் அழகிகள் அதிகமாகுதல்.
இசை பெருகி விடுதல்,இன்னும் பல அடையாளங்கள் சிறியவை அனைத்தும் அநேகமாக நிகழ்ந்து விட்டன,
மேலும் பெரிய அடையாளங்கள் பல உள்ளன அவற்றில் முக்கியமானவற்றை மட்டும் இங்கு சொள்ளப்படுக்றது,அவை:

தஜ்ஜாலின் வருகை

தஜ்ஜால் எல்லா ஊர்களுக்கும் சென்று தனது மாயா ஜாலங்களால் மக்களை வழிகெடுப்பான்.
அவன் நாற்பது நாட்கள் பூமியில் வாழ்வான்.அனைத்து இடற்களுக்கும் செல்வான். ஆனால் மஸ்ஜிதுல் ஹராம், மதீனா பள்ளி வாசல்,தூர் மஸ்ஜித், பைத்துல் முகத்தஸ் ஆகிய நான்கு பள்ளிவாசல்களையும் அவனால் நெருங்க முடியாது.
தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து தங்களையும் காப்பாற்றி, ஈமானையும் பாதுகாத்திட நபி(ஸல்) இரு வழிகளைக் கற்றுத் தந்துள்ளார்கள்.
அவன் சிரியா செல்லும் வழியில் நபி ஈஸா(அலை) அவர்களால் கொல்லப்படுவான். அதன் பின் ஈஸா(அலை) அவர்கள் இந்த பூமியில் நாற்பது ஆண்டுகள் நேர்மையான தலைவராக இருந்து மக்களை வழிநடத்துவார்கள் என நபி அவர்கள் கூறினார்கள்

தஜ்ஜாலின் வருகை பற்றி எல்லா இறைதூதர்களும் எச்சரித்துள்ளனர். அவன் ஒற்றைக்கண்ணன்.உங்களின் இறைவன் ஒற்றக்கண்ணன் அல்லன்.அவனது இரு கண்களுக்கிடையேகாஃபிர்-இறைமறுப்பாளன்என எழுதப்பட்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,தஜ்ஜாலின் ஒரு கண் திராட்சைபோன்று சுருங்கி இருக்கும்,அவன் வெள்ளை நிறத்தவனாக இருப்பான்.அவன் உடல் கவர்ச்சியாக இருக்கும்.
சற்று குண்டாக இருப்பான், பின்புறத்திலிருந்து நோக்கினால் அவனது தலைமுடி சுரு் சுருளாக இருக்கும்,பரந்த நெற்றியுடையவனாக இருப்பான். குள்ளமானவனாகவும், கால்கள் இடைவெளி அதிகமுள்ளவனாகவும் இருப்பான்.
அவனின் ஒரு கண் ஊனம்.மறுகண் பச்சை நிறக்கல் போலிருக்கும் என்பது தான் அவனது தோற்றத்தில் வித்தியாசமானவை ஆகும். இவையே தஜ்ஜால் பற்றிய சரியான அறிமுகம் ஆகும். இவை தவிர அவன் பற்றி கற்பனையாகக் கூறப்படுபவை யாவும் பொய்யான தகவல்கள் ஆகும்.
ஈஸா[அலைஹிஸ்ஸலாம்]வருகை.
ஈஸா[அலை]அவர்கள் கியாமத் நாளின் அடையாளமாக திகழ்கிறார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகவும் அழகாக நமக்கு விளக்கியுள்ளனர்.
'எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் உங்களிடம் நீதி செலுத்துபவராக, தீர்ப்பு வழங்குபவராக இறங்குவார். சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாருமில்லாத அளவுக்கு செல்வம் கொழிக்கும்' என்பது நபிமொழி.
போட்டி, பொறாமை, கபடம் ஆகியவை எடுபட்டுப் போகும்'அவர் இறங்கக் கூடிய காலத்தில் இஸ்லாத்தை தவிர எல்லா மதங்களையும் அல்லாஹ் அழிப்பான்'
தஜ்ஜாலின் கொடுமை தலைவிரித்தாடும் போது தான் ஈஸா (அலை) இறங்குவார்கள்.
தஜ்ஜாலின் நிலை இவ்வாறு இருக்கும் போது மர்யமின் மகன் மஸீஹை அல்லாஹ் அனுப்புவான். டமாஸ்கஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள வெள்ளை மனாரா(கோபுரம்)வுக்கருகில் அவர் இறங்குவார். இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது தன் கைகளை வைத்தவராக இறங்குவார். அவர் தலை குனிந்தால் தலையில் நீர் சொட்டும். தலையை உயர்த்தினால் முத்துப் போல் தண்ணீர் சிதறும்! அவரது மூச்சுக்காற்று அவரது பார்வையில் எட்டும் தூரம் வரை செல்லும். மூச்சுக் காற்று படுகின்ற எந்தக் காபிரும் சாகாமல் இருப்பதில்லை. பின்னர் தஜ்ஜாலைத் தேடுவார்கள். 'லுத்' (பைத்துல் முகத்தஸின் அருகிலுள்ள ஊர்) எனும் வாசலில் வைத்து அவனைக் கொல்வார்கள் என்றும் நபி (ஸல்) கூறியுள்ளார்கள,
ஈஸா (அலை) மரணித்து சில காலத்தில் யுகமுடிவு நாள் வந்து விடும் எனவும் நபி (ஸல்) கூறியுள்ளனர்.

யுகமுடிவு நாளின் மிக நெருக்கத்தில் ஏற்படவுள்ள நிகழ்ச்சிகளில் ஈஸா (அலை) அவர்களின் வருகையும் ஒன்றாகும் என்பதை முஸ்லிம்கள் நம்பியாக வேண்டும். யஃஜூஜ் மஃஜூஜ்.உலகம் அழியக்கூடிய காலம் நெருங்கும் போது ஏற்படும் பத்து அடையாளங்களில் யஃஜுஜ், மஃஜுஜ் எனும் கூட்டத்தினரின் வருகையும் ஒன்றாகும். இக்கூட்டத்தினர் பற்றி திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் பல விபரங்கள் கூறப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தினர் இனி மேல் தான் பிறந்து வருவார்கள் என்பதி
ல்லை. நீண்ட காலமாகவே அவர்கள் இருந்து வருகின்றனர். அவர்கள் மலைகளால் சூழப்பட்ட பகுதியில் வசிக்கின்றனர். அவர்கள் எந்த நாட்டில் இவ்வாறு அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்குக் கூறவில்லை. யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அவர்கள் வெளிப்பட வேண்டுமானால் மற்ற மனிதர்கள் அவர்களை அறிந்து கொள்ளாமலிருப்பது அவசியம். அதற்காகக் கூட இறைவன் மறைத்து வைத்திருக்கலாம்.
<!--[if !supportLineBreakNewLine]-->
<!--[endif]-->
அவர்களின் முகங்கள் கேடயம் போல் அகன்றதாகவும், (வட்டமாகவும்) கண்கள் சிறியதாகவும், முடிகள் செம்பட்டையாகவும் அமைந்திருப்பார்கள். அம்மலைகளுக்கிடையே இரும்புப் பாளங்களை அடுக்கி செம்பு உருக்கி ஊற்றப்பட்டுள்ளது. அதைத் தாண்டி வரவும் முடியாது. அதைக் குடைந்து வெளியே வரவும் முடியாது. யுக முடிவு நாளின் நெருக்கத்தில் அந்தத் தடை உடைக்கப்பட்டு அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள். ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என்று 18:94-96 வரயிலான வசனங்கள் கூறுகின்றன.
யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின் வாழ்க்கையைப் பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப் பதில்லை.உங்களில் ஒருவர் என்றால் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் ஆயிரம் என்ற கணக்கில் நரகவாசிகளின் எண்ணிக்கை இருக்கும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைந்து வருவார்கள். அவர்களில் முதலில் வருபவர்கள் தபரிய்யா என்ற ஏரியில் தண்ணீரைக் குடிப்பார்கள். பின்னால் வருபவர்களுக்குத் தண்ணீர் இருக்காது. அந்த நேரத்தில் ஈஸா நபியவர்களும், அவர்களின் தோழர்களும் இக்கூட்டத்தினால் முற்றுகையிடப்படுவார்கள்.
உலகையே கைப்பற்றி விட்டோம் என்ற மமதையில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் பைத்துல் முகத்தஸ் பகுதியில் உள்ள மலையில் ஏறுவார்கள். பூமியில் உள்ளவர்களை நாம் கொன்று விட்டோம். வாருங்கள் வானத்தில் உள்ளவர்களைக் கொல்வோம் என்று அவர்கள் கூறு வார்கள். தங்கள் அம்புகளை வானத்தை நோக்கி எய்வார்கள். அவர்களின் அம்புகளை ரத்தத்தில் தோய்த்து அல்லாஹ் திருப்பி அனுப்புவான்,இதை பார்த்து அவர்கள் வானையும் பிடித்து விட்டோம் துள்ளி குதிப்பார்கள்.
ஈஸா[அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முஸ்லிம்களோடு தூர்சீனா மழையில் இருப்பார்கள் அங்கு இவர்கள் செல்ல முடியாது,, அன்று ஒரு மாட்டின் தலை இன்றைய நூறு தங்கக் காசுகளுக்குச் சமமாகத் தோன்றும் அளவுக்கு முற்றுகை நீடிக்கும். ஈஸா நபியவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள். ஒரேயடியாக யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் செத்து விழுவார்கள். பின்னர் ஈஸா நபியவர்களும், அவர்களின் தோழர்களும் தூர் மலையிலிருந்து கீழே இறங்குவார்கள். ஒரு ஜான் இடம் கூட மிச்சமில்லாமல் அவர்களின் உடல் பூமி முழுவதும் சிதறி நாற்றமெடுக்கும். அப்போது ஈஸா நபியவர்கள் மீண்டும் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள்.

அப்போது அல்லாஹ் ஒட்டகத்தின் கழுத்தைப் போன்ற பறவைகளை அனுப்புவான். அவை உடல்களைத் தூக்கிச் சென்று வீசி எறியும். பின்னர் அல்லாஹ் மழையைப் பொழிவிப்பான். கூடாரமோ, மண் வீடுகளோ எதையும் விட்டு வைக்காமல் அவற்றின் மேல் மழை பொழியும். பூமியைக் கண்ணாடி போல் சுத்தமாக்கும்.

"
பூமியே உனது பழங்களை முளைக்கச் செய்! உனது அபிவிருத்தியைத் திரும்பக் கொடு''என்று (இறைவனால்) பூமிக்குக் கட்டளை பிறப்பிக்கப்படும். அந்நாளில் ஒரு மாதுளையை ஒரு பெரும் கூட்டம் சாப்பிடும். அதன் தோல்களில் ஒரு கூட்டம் நிழல் பெறுவார்கள். பாலில் பரகத் செய்யப்படும். ஒரு ஒட்டகத்தில் கறக்கும் பால் ஒரு பெரும் கூட்டத்துக்குப் போதுமானதாக இருக்கும். ஒரு மாட்டில் கறக்கப்படும் பால் ஒரு கோத்திரத்துக்குப் போதுமானதாக ஆகும். ஒரு ஆட்டில் கறக்கப்படும் பால் ஒரு குடும்பத்துக்குப் போதுமானதாக அமையும். இவர்கள் இவ்வாறு இருக்கும் போது தூய்மையான காற்றை அல்லாஹ் அனுப்புவான். அனைத்து முஸ்லிம்களின் உயிர்களையும் அது கைப்பற்றும். மிகவும் கெட்டவர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள்.அல்லாஹ் என்று சொல்பவர்கள் ஒருவரும் இருக்கமாட்டார்கள், அப்போதுதான் சூரியன் மேற்கில் உதயமாகும் அதன் பிறகு ஈமான் கொள்பவர்களின் ஈமான் ஏற்றுக்கொள்ளப்படாதுஎன்று நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள்.
Sp.pattinam,சுந்தரை சதக்மைந்தன்

Sunday, 27 May 2012

மத நல்லிணக்கம் :


மாநபி வலியுறுத்திய மத நல்லிணக்கம் :

இன்றைய உலகில் சமூகங்களுக்கிடையில், மதங்களுக்கு மத்தியில் ஒற்றுமையும், சகிப்புத்தன்மையும் குறைந்து வேற்றுமையும், சண்டை சச்சரவுகளும் மேலோங்குவதை காணுகிறோம்.
எல்லா மதங்களுமே நல்ல பண்புகளையும், வேற்றுமையில் ஒற்றுமையையும், அமைதியான முறையில் வாழும் சூழ் நிலையையுமே போதிக்கிறது.ஆனால் மதத்தின் பெயரில் அமைதியின்மையையும், குழப்பங்களையும் மத வெறியர்கள் உருவாக்குகிறார்கள்.
இந்நிலையில் மத நல்லிணக்கம், மாற்று மதத்தவர்களையும் மதிக்கும் அழகிய பண்புகளைப்பற்றி அல்குர்ஆணின் போதனைகள் அமைந்திருக்க காணலாம். இறுதித்தூதர் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் மதினாவில் பல இன மக்களுக்கிடையில் நல்லுறவு, நல்லிணக்கத்தோடு வாழ்ந்து எல்லோரும் அமைதியோடும், சுபிட்சமாகவும் வாழ்ந்திட மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய சரித்திரச்சான்றுகள் யாவை என்பதை சில நிகழ்வுகளின் மூலம் உங்களுக்கு இக்கட்டுரை வாயிலாக சமர்ப்பிக்கிறேன்.
அல்குர்ஆண்  28வது அத்தியாயம் 8வது வசனத்தில் “  முஸ்லீம்களே  உங்களிடம் போர் புரியாமல், உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்ற நினைக்காமல் உங்களுடன் நட்புடன் இருக்கும் முஸ்லீம் அல்லாதவர்களுடன் நீங்களும் நியாயமாகவும் நல்லவிதமாகவும் நடந்து கொள்ளுங்கள்.” என்ற கருத்து உணர்த்தப்படுகிறது.

அல்குர்ஆனில் அல்லாஹுத்தஆலா “பிர்று “ என்ற வார்த்தையை பெற்றோர்களுக்கு உபகாரம் செய்யுங்கள் என்பதற்கே பயன்படுத்துகிறான். அந்த வார்த்தையைத் தான் முஸ்லீம் அல்லாதவர்களுடன் நல்ல விதமாக நடந்துகொள்ளுங்கள் என்ற கருத்தை வெளிப்படுத்த பயன்படுத்தியுள்ளான். எனவே இவ்வசனத்தின் மூலம் மத நல்லிணக்கத்தையும், மாற்று மதத்தவர்களை மதிப்பதையும் அவசியம் என்பதை இறைவன் தெளிவுபடுத்துவதாக உலக லாவிய அறிஞர் அல்லாமா யூசுப் அல்கர்லாவி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இதே கருத்தைதான் கீழ்வரும் வசனங்களின் கருத்துக்களும் உருதிப்படுத்துகிறது. அத்தியாயம் 33- வசனம் -21. அத்தியாயம் 109 –வசனம் – 6.
(முஸ்லீம்களே!)பிறமதத்தவர்கள்வணங்கக்கூடியவைகளைநீங்கள்திட்டாதீர்கள்.காரணம்அறியாமையினால்அவர்கள்அல்லாஹ்வைதிட்டுவார்கள்.எனவேஅவர்களிடம்உங்களின்அணகுமுறைஇவ்வாறுஇருக்கவேண்டும்.”அவர்களிடம் கூறுங்கள்!நீங்கள்வணங்ககூடியவைகளைநாங்கள்வணங்கமாட்டோம்.நாங்கள்வணங்கிடும்இறைனைநீங்களும்வணங்கப்போவதில்லை(எனவே நமக்குள் எவ்வித சண்டை சச்சரவுகளும் தேவையில்லை) உங்கள் மதம் உங்களுக்கு. எங்கள் மார்க்கம் எங்களுக்கு” என்று கூறுவதின் மூலம் சிறந்த மத நல்லிணக்கத்தை அல்குர்ஆன் கற்றுத் தருகிறது.
அல்லாமா யூசுப் அல்கர்ழாவி அவர்கள் தன்னுடைய அல் ஈமான் வல்ஹயாத்  என்ற நூலில் கீழ்வரும் வரலாற்றுச் சம்பவத்தை குறிப்பிடுகிறார்கள். இஸ்லாமிய உலகின் முதல் கலீபா (ஜனாதிபதி) அபூபக்கர் அவர்களின் ஆட்சி காலத்தில் நடந்த போர் ஒன்றில் முதியவர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டுக் கிடந்ததை பார்த்த கலீபா அவர்கள் அதை வன்மையாக கண்டித்து போர்க்களத்தில் முதியவர்களையும், பெண்களையும், சிறார்களையும், தாக்கக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியாதா ? இஸ்லாம் தடை செய்த இப்பாதக செயலை செய்தவர் யார் ? என்று கேட்டார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் நம்மையும் விரோதிகள் இவ்வாறு கொலைசெய்யவில்லையா?என்றுஅச்செயலைநியாயப்படுத்தமுனைந்தார்கள். இதைசெவிமடுத்திய சாந்த குணம் நிரம்பிய கலீபா அவர்களின் முகம் கடும் சினத்தால் சிவந்தது. பின்பு தன்தோழர்களைநோக்கி பாரசீகர்களையும், ரோமர்களையுமா நீங்கள் பின்பற்றுகிறீர்கள் ? இறை வேதமும் இறைத் தூதரின் வாக்கும் நமக்கு போதாதா? என்றார்கள் .
இந் நிகழ்ச்சியின் மூலம் இஸ்லாமியர்கள் எச்சூழ்நிலையிலும் வரம்பு மீறுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பது புலப்படுகிறது.
எனவே மதப்பற்று இருக்கலாம் மதவெறி இருக்கக்கூடாது. இனப்பற்று இருக்கலாம் இனவெறி இருக்கக்கூடாது என்பதே ஆழ்ந்த ஆழமான கருத்து. இதையே பின் வரும் நபிமொழியில் தெளிவுபடுத்தப்படுகிறது. ஒரு முறை புசைலா  என்ற சஹாபி பெண்மணி நபி (ஸல் ) அவர்களிடம் வந்து இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா  என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இன வெறி அல்ல. மாறாக தன் சமூகத்தை சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி என்றார்கள்.- நூல் அஹ்மத்:
ஆகவே மத வெறிக்கோ இனவெறிக்கோ இஸ்லாத்தில் இடமில்லைஎன்பதைமாநபிஅவர்கள்வலியுறுத்தியுள்ளார்கள். நீங்கள் பூமியில் உள்ளவர்களை நேசியுங்கள், இரக்கம் காட்டுங்கள். வானில் உள்ளவன் உங்களை நேசிப்பான், இரக்கம் காட்டுவான் என்ற கருத்தை வெளிப்படுத்தி முழு மனித சமூதாயமும் ஒரே சமுதாயமே என்பதை வலியுறுத்தினார்கள்.
அவ்வாறேபிறமதத்தைச்சார்ந்ததலைவர்களையும்,அவர்களின் கருத்துக்களையும் மதிக்கும் அருமை நபியின் பண்புகளை மக்கா வெற்றியின் போது காண முடிந்தது.
அதாவது மக்காவின் மண்ணின் மைந்தர்களாகிய முஹாஜிரீன்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் புகுந்தார்கள் என்ற காரணத்தினால் சொந்த தாய்நாடு மக்காவை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். தன் அன்பான குடும்பம், சொந்த பந்தங்களை துறந்து அகதிகளாக மதினாவில் தஞ்சம் புகுந்தார்கள். ஆனால் எட்டு ஆண்டுகளிலேயே மிகப்பெரும் படைபலம், ஆல்பலத்துடன் மக்காவிற்குள்  நுழைந்த முஹாஜிரீன்கள்தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மனதிலே நினைத்து இன்று பழிவாங்கும் நாள் என்று தங்களுக்கு மத்தியில் கூறிக்கொண்டார்கள். இதை செவிமடுத்த அபூசுப்யான் பீதி அடைந்தவராக மாநபியிடம் ஓடி வந்து பாதுகாப்பு கேட்கிறார். அது நாள் வரை தனக்கும், தன் தோழர்களுக்கும் இழைத்த கொடுமைகளை மன்னித்து நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் இப்படி அறிவிக்கிறார்கள்.” இன்றைய நாள்  மன்னித்து இரக்கத்தோடு நடந்து கொள்ளும் நாள் என்று: இன்னும் அபூசுப்யான் வீட்டில் அபயம் தேடி நுழைந்தவர் பாதுகாப்பு பெற்றவர் என்றும் அறிவித்தார்கள்.
இன்றளவும் இஸ்லாமிய கோட்பாட்டில் வாழும் முஸ்லீம்கள் மாற்று மததுக்கோ, அதை சார்ந்தவர்களுக்கோ எவ்வித களங்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் சில விஷமிகள், மனித குலத்தின் மகா எதிரிகள் மத நல்லிணக்கத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தி அச்செயலுடன் இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் இணைத்து உலக அமைதியின்மைக்கு முஸ்லீம்களே  காரணம் என்ற நச்சுக் கருத்துக்களை பரப்புகின்றனர். ஆனால் முஸ்லீம்கள் இறை வேதம், இறைத்தூதரின் வாக்கின் அடிப்படையில் அழகிய பண்புகளை வெளிப்படுத்தி இவர்களின் சொற்போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் இன்ஷாஅல்லாஹ்.:
        எல்லாம் அறிந்த இறைவனுக்கே எல்லாப்புகழும் .:
                வபில்லாஹித்தவ்பீக் வல்ஹிதாயா.:
                                      வஸ்ஸலாம் .:


Monday, 21 May 2012

புன்னகையே பொன்னகையிட அழகு

எது அழகு? ========
ஒரு புன்னகை என்னவெல்லாம் சொல்கிறது?
நான் உங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சி
அடைகிறேன்.
...
நான் உங்களை விரும்புகிறேன்.
நான் உங்களுக்கு உதவ நினைக்கிறேன்.
நான் உங்களிடம் நன்றியுள்ளவன்
நான் உங்களுக்கு நம்பிக்கையானவன்
நான் உங்களிடம் நன்மதிப்பு கொண்டவன்.
நான் உங்களுடைய தேவைகளை
நிறைவேற்றுவேன்
நான் உங்களை நம்புகிறேன்
என் மனது இனிமையானது
நான் அன்புள்ளம் கொண்டவன்
இன்னும் எத்தனை எத்தனையோ
அர்த்தங்கள்…
புன்னகையே பொன்னகையிட அழகு!
 
sp.pattinam-Abdul Kayyoom Baqavi

Wednesday, 16 May 2012

மனித நேயமும்


       மாநபியும் மனித நேயமும்
இன்றைய உலகில் எங்கும் “ என்றும் “ எப்பொழுதும் “மொழியப்படும் வார்த்தை “ இஸ்லாம் “ இஸ்லாம் “ என்பதுதான் என்று கூறினால் அது மிகையல்ல. அந்தளவு உலகம் முழுவதும் விரிந்து பறந்து காணப்படுகிறது.
ஆனால் இந்த தீனுல் இஸ்லாமை மாநபி (ஸல்) அவர்கள் மக்களிடம் எடுத்து சென்று அதன் பால் அவர்களை அழைத்தபோது மிகப்பெரிய எதிர்ப்புகளும், சோதனைகளும் புயலன கிளம்பியது .
இருந்தும் நபியின் சொல்லில் உள்ள ஆழமான கருத்துகளும், அதில் பொதிந்திருந்த மனித நேயமும் அநீதியிலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் விடுபடவேண்டும் என்று ஏங்கிய உள்ளங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. ஆகவே ஓடுக்கப்பட்ட மக்கள் இஸ்லாமில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். பொதுவாக ஓடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு யார் குரல் கொடுத்தாலும் ஓடுக்கியவர்களின் எதிர்ப்புக்கும், கோபத்திற்கும் ஆளாக வேண்டி வரும்.
இவ்வாறுதான் முஹம்மது நபி (ஸல் ) அவர்கள் இஸ்லாம் என்ற சுதந்திர காற்றை வெளிப்படுத்திய போது அந்த மக்கள் எதிர்ப்பை காட்டினார்கள். ஆனாலும் நபியின் உயர்ந்த, சிறந்த பண்பை பாராட்டினார்கள். மதித்தார்கள். உண்மையாளர், நம்பிக்கையாளர் என்ற பட்டத்தை வழங்கி புகழ்ந்தார்கள், வாழ்த்தினார்கள்.
இந்நிலையில் அந்த மக்களின் மனிதாபிமானமில்லாத, கரடு முறடான கொள்கைகளையும், மனித நேயமற்ற செயலையும் கண்டு வருந்தினார்கள். அவற்றை களைவதைப்பற்றி சிந்தித்து, அதற்காக கடும் முயற்ச்சி செய்து அதில் வெற்றியும் பெற்றார்கள்.
ஆம் இனவெறியும், மொழிவெறியும் மிகுந்த அன்றைய அரபு மக்களின் மனதில் மனிதர்கள் அனைவரும் ஒரே குடும்பம், ஒரே சமூகம் என்ற மாபெரும் சித்தாந்தத்தை ஆழமாக பதிய வைத்தார்கள்.
அருள் மறை அல்கு ர்ஆனின் வசனமாகிய, மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர் ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும், ஆக்கினோம் (அதனை வைத்து பெருமையடித்துக் கொள்வதற்காக அல்ல ) அல் குர்ஆண் 4:13 என்ற வசனத்தின் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள்.

மா நபியின் மனித நேயத்தை வரலாறு நெடிய நாம் காணலாம் .
ஹாரிஸா என்பவரின் மகன் ஜைத் என்ற சிறுவர் மக்காவின் அடிமைச்சந்தையில் ஏலம் விடப்பட்டார்.  அவரை விலைகொடுத்து வாங்கி தனது அருமை கணவர் அன்பு நபி (ஸல் ) அவர்களுக்கு அன்பளிப்பு செய்தார்கள் அன்னை கதீஜா அம்மையார். அவரை பெற்றுக்கொண்டு தனது பணிவிடைக்கு அமர்த்திக்கொண்டார்கள் பூமான் நபி (ஸல் ) அவர்கள்.
அடிமைதானே என்று ஏளனத்துடன் பார்க்காமல், உதாசீனம் செய்யாமல் தனது வளர்ப்பு மகனாகவே ஆக்கி கொண்டார்கள் அண்ணல் பெருமானார் (ஸல் ) அவர்கள்.
ஜைதும் பண்பு நபிக்கு பணிவிடை செய்வதில் பரவசமடைந்தார். நபியின் மீது அளவு கடந்த பாசமுடன் நடந்து கொண்டார். இந் நிலையில் காணாமல் போன  தன் மகன் மக்காவில் இருப்பதை அறிந்த அவரின் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்து மக்காவிற்கு புறப்பட்டு வந்து , நபி (ஸல் ) அவர்களை சந்தித்து தனது திருப்பி கொடுத்து விடுங்கள் உங்களுக்கு வேண்டிய பொருளை தருகிறோம் என்று கூறினார்கள்.
அவர்களின் வேண்டுதலை பொறுமையுடன் செவி மடுத்திய நேச நபி (ஸல் ) அவர்கள் இவர் உங்கள் பிள்ளை, உங்களுக்கு சொந்தமானவர், நீங்கள் விரும்பி, அவரும் விரும்பினால் தாராளமாக அழைத்துச்செல்லலாம்.அதற்கு எந்த தொகையும், பொருளும் எனக்கு கொடுக்கத்தேவையில்லை என்றார்கள் .
இந்த மனித நேயத்தை மனதார பாராட்டி, புகழ்ந்து மகிழ்ச்சியாக தன் மகனிடம் வந்து நீர் புறப்படு, நபி (ஸல் ) அவர்களிடம் அனுமதி பெற்றுவிட்டோம் என்றார்கள். அதற்கு ஜைத் தனது பெற்றோர்களிடம் உங்களை நான் மதிக்கிறேன், நேசிக்கிறேன். ஆனால் முஹம்மது நபி (ஸல் ) அவர்களை பிரிந்து என்னால் ஒரு நொடிப்பொழுதும் இருக்க முடியாது.தங்களுடன் வர முடியாத நிலைக்கு என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறிவிட்டார் .

அருமையானவர்களே ! தங்களின் பெற்றோர்களை பல காலம் பிறிந்து வாழ்ந்த மகன், அந்த பெற்றோர்களை சந்தித்த பிறகும் உடன்செல்ல மறுத்து விடுகிறார் . காரணம் சாதாரண குடும்பத்தில் பிறந்து, அடிமை என்ற அடைமொழியோடு வந்த இவரை உயர்ந்த கோத்திரம், சிறந்த வமிஷம், மகத்தான அந்தஸ்த்துடன் இருந்த நபி (ஸல் ) அவர்கள் ஜைத்திடம் மாபெரும் மனித நேயத்துடன் நடந்துகொண்ட விதம் அவரை இந் நிலைக்கு மாற்றியது.
அவ்வாறே நபியவர்களிடம் வேலை செய்து வந்த ஒரு யூதச்சிறுவன் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த போது அச்சிறுவனின் இருப்பிடத்தை தேடிச்சென்று நலம் விசாரித்தார்கள்.
ஒரு போரிலிருந்து திரும்பும் சமயம் வழியில் ஒரு யூதப்பெண் அண்ணார் அவர்களுக்கு விருந்துண்ண அழைத்தபோது மா நபியவர்கள் அவ்வழைப்பை ஏற்று விருந்துண்ண சென்றார்கள்.
ஒரு முறை நபி (ஸல் ) அவர்களின் உற்றத்தோழர் அபூபக்கர் (ரலி ) அவர்களுக்கும்,பனூஹாஸ் என்ற யூதனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் பிரச்சனை முற்றி யூதரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார்கள் அபூபக்கர் (ரலி ) அவர்கள். இப்பிரச்சனைக்கு தீர்வை காண  நீத நபியின் தர்பாருக்கே சென்றார்கள் அந்த யூதர்கள்.

அன்பானவர்களே ! அக்காலத்தில் முஸ்லீம்களுக்கு பரமவிரோதியாக இருந்த யூதர்களின் சிறுவனை நோய்விசாரிக்க சென்றது, அவர்களின் விருந்து அழைப்பை ஏற்றுக்கொண்டது, தன்னை நாடிவந்தவர்கள் யாராக இருந்தாலும், எம்மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர்களை அரவணைப்பது நபியின் மனித நேயத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
எனவே நாமும் அவர்களை புகழ்வதோடு மட்டும் போதுமாக்கி கொள்ளாமல் உன்னத நபியின் உயர்ந்த பண்புகளுக்கு செயல் வடிவம் கொடுத்து மாநபியைப்போல் மனித நேயத்துடன் வாழ்வோம், பிறரையும் வாழ வைப்போம் . மகத்தான சமுதாயத்தை உருவாக்குவோம்.:

             ###வபில்லாஹித்தவ்பீக் வல் ஹிதாயா###

                                    ::::வஸ்ஸலாம்::::


Tuesday, 15 May 2012

முதல் ஆலயம் தோன்றிய வரலாறு


பைத்துல்லாஹ் தோன்றிய வரலாறு

இறையருளால்  இக்காலத்தில்  எங்கும்  இறையில்லங்கள்  நிரம்பியுள்ளன . முஸ்லிம்கள்  இறைவனை  தொழிதிட  அவை நன்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன . இது இந்த சமுதாயத்திற்கு மட்டுமே அல்லாஹ் அருளிய பேருபகாரமாகும்.காரணம் முந்திய சமுதாயத்தினர் குறிப்பிட்ட இடத்தில்தான் வணக்கம் செய்திட வேண்டும். ஆனால் பூமி முழுவதும் தொழுமிடமாகவும் சுத்தமான பகுதியாகவும் இச்சமுதாயத்திற்கு மட்டுமே அல்லாஹ் வழங்கியுள்ளான்.
ஆனால் உலகில் வாழும் முஸ்லிம்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலுருந்து தொழுதாலும் அவர்கள் முன்னோக்குவது உலகில் முதன்முதலாக எழுப்பப் பட்ட இறையில்லம் “ கஅபாவை “ தான்.
இந்த பைத்துல்லாஹ் உலகம்உருவாக்கப்படுவதற்கு சுமார் 2000, ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட ஓர் இறையில்லம். இந்த செய்தியை அபூஹுரைரா (ரலி) அவர்கள் தம் மாணவர்களிடம் கூறிய போது உலகமே உருவாக்கப்படவில்லை. அந்த சூழ்நிலையில் கஅபா எப்படி இருந்திருக்க முடியும்?என்ற கேள்வி அவர்களுக்கு முன் எழுப்பப்பட்ட போது அவர்கள் இப்படி பதில் கூறினார்கள். அல்லாஹுத்தஆலா உலகை உருவாக்குவதற்கு முன்பு முழு உலகையும் தண்ணீரால் நிரப்பியிருந்தான். அல்லாஹ்வின் அர்ஷும் தண்ணீரின் மீதே அமைந்திருந்தது என்பது நபிமொழி. அந்நேரத்தில் ஓர் இடத்தில் மட்டும் நுரை வட்டமாக இருந்தது. அந்த இடத்தில் இரு மலக்குகளை ஏற்படுத்தி தன்னை வணங்கி வரும்படி இறைவன் கட்டளை பிறப்பித்திருந்தான். அம்மலக்குகளும், சுமார் இரண்டாயிரம் வருடங்கள் அவ்விடத்திலேயே அமர்ந்து அல்லாஹ்வை வணங்கி வந்தனர்.
இறைவன், தன் வல்லமையை வெளிப்படுத்த எண்ணி இவ்வுலகை உருவாக்க நாடியபோது இந்த நுரை அமைந்த பகுதியிலிருந்துதான் உலகின் உருவாக்கத்தை இறைவன் ஏற்படுத்தினான். அந்த இடம் தான் புனித கஅபா இருக்கும் பகுதி. எனவேதான் பூமியின் மத்திய பகுதியில் கஅபா அமைந்துள்ளது. அதன்பிறகு சுவனத்திலிருந்து ஒரு கூடாரத்தை மலக்குமார்கள் கொண்டுவந்து அவ்விடத்தில் வைத்து இறை வணக்கத்தில் ஈடுபட்டனர்.
எப்பொழுதும் முதல் மனிதர் பாவா ஆதம் (அலை) அவர்கள் பூமிக்கு வந்தார்களோ அப்பொழுது அவர்களுக்கு இக்கூடாரத்தை மலக்குமார்கள் அறிமுகம் செய்து வைத்தனர். அதை தொடர்ந்து ஆதம் (அலை) அவர்களும் தனக்கு தோதுவாக அக்கூடாரத்தை மாற்றி அமைத்து இறைவணக்கத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.
ஹஜ்ரத் ஆதம் (அலை) அவர்களின் மரணத்திற்குப் பின் வாணிற்கு உயர்த்தப்பட்டு விட்டது. ஆனால் அக்கூடாரத்தைச் சுற்றி அமைத்த சூழல் அப்படியே இருந்தது. அதன்பிறகு ஆதம் (அலை ) அவர்களின் மகனார் ஷீத் (அலை ) அவர்கள் இந்த கஅ பாவில் சிறிது மாற்றம் செய்து கட்டி முடித்தார்கள். இவர்களின் வழித்தோன்றலில் நபி நூஹ் (அலை) அவர்கள் வந்தார்கள். இவர்களின் காலத்தில் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெள்ளப்பிரளயம் ஏற்பட்டு உலகமே தண்ணீரால் அழிந்த போது இந்த கஅபாவின் அடிச்சுவடு மட்டுமே அப்படியேயிருந்தது.
இந்த அடையாளச் சுவடை வைத்துதான் நபி இப்ராஹீம் (அலை ) அவர்களுக்கு  “கஅ பா வை கட்டுங்கள் “என்ற கட்டளையை இறைவன் பிறப்பித்தான். இந்நிகழ்வு மட்டுமே அல்குர்ஆணின் 2:127 என்ற வசனத்தில்  தெளிவுபடுத்தப்படுகிறது. எனவே உலக மக்களின் முழுப்பார்வையையும், தன் பக்கம் ஈர்த்த இந்த கஅபாவை நிர்மானித்தவர்களை வரிசையாக பார்ப்போம்.
முதலாவது! மலக்குகளின் மூலமாக  அமைக்கப்பட்டது .
இரண்டாவது ! நபி ஆதம் (அலை ) அவர்கள் .
மூன்றாவது ! நபி ஷீத் (அலை) அவர்கள் .
நான்காவது ! நபி இப்ராஹீம் (அலை ) அவர்கள் .
ஐந்தாவது ! அமாலிக்கா என்ற சமூகத்தினர் .
ஆறாவது !ஜுரும் என்ற சமூகத்தினர் .
ஏழாவது! குஷை இப்னு கிலாப் அவர்கள் .
எட்டாவது ! குரைஷி கூட்டத்தினர் .
ஒன்பதாவது ! அப்துல்லா இப்னு  ஜுபைர் (ரலி ) அவர்கள் .
பத்தாவது ! ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப்  என்பவர் .
பின் குறிப்பு : குறைஷியர்கள்  காலத்தில்  கஅபா வின் சுவர்கள் பலகீனமானதால் அதை புதிதாக நிர்மாணம் செய்ய மக்களிடம் முழுக்க முழுக்க ஹலாலான நிதியை வசூல் செய்து இந்த  கஅபாவை நிர்மானித்தார்கள். ஆனால் அவர்கள் திரட்டிய நிதி முழு கஅபாவையும் நிர்மாணம் செய்ய போதுமானதாக இருக்கவில்லை. எனவே பகுதியை அப்படியே விட்டுவிட்டு மீதமானதை கட்டி முடித்துவிட்டார்கள். விடப்பட்ட பகுதிக்குத்தான் ஹதீம் என்று சொல்கிறோம் . இதுவும் கஅபாவின் ஒரு பகுதியாகவே கணிக்கப்படும். இந்த நிகழ்ச்சி நடைபெற்ற சமயத்தில் நபி (ஸல் ) அவர்களின்  வயது முப்பத்தி ஐந்தாக இருந்தது .
பிறகு  அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்  (ரலி ) அவர்கள் மக்காவின் கவர்னராக இருந்தபோது புனித கஅபாவை நபி இப்ராஹீம் (அலை ) அவர்கள் ஏர்படுத்திய அமைப்பில் கஅபாவின்  எந்தபகுதியும் விடப்படாமல்  முழுமையாக கட்டினார்கள் . அதன் பிறகு ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் என்பவர் மக்காவின்  கவர்னராக பொருப் பேற்றப்பின் குறைஷியர்கள் எவ்வமைப்பில் புனித கஅபாவை அமைத்தார்களோ அவ்வாறே இவரும் கஅபா வின் ஒரு பகுதியை விட்டுவிட்டு மீத முள்ளதை கட்டினார்கள் . பனூ அப்பாஸிய்யாக்களின்  ஆட்சியாளர்  ஹாரூன்  ரஷீத் அவர்கள் இமாம் மாலிக்  (ரஹ் ) அவர்களிடம் தாங்கள்  அனுமதித்தால் இந்த கஅபாவை நபி இப்ராஹீம் (அலை ) அவர்களும் , அதைத் தொடர்ந்து அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்  (ரலி) அவர்களும் எந்த அமைப்பில் கட்டினார்களோ  அதே அமைப்பில் நான் அமைக்கிறேன் என்று கோரிய போது இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தடுத்து விட்டார்கள் . காரணம் அரசர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள் . அதனால் கஅபாவின்  அமைப்பும் மாறிக்கொண்டே யிருக்கும். பிறகு அதன் புனிதத் தன்மையில்  குறைவு வந்து விடக்கூடாது என்று தடுத்து விட்டார்கள் .
முடிவில் சில வரிகள் :
உலகில்  தோன்றிய முதல் இறை இல்லம் கஅபா உட்பட அனைத்து மஸ்ஜிதுகளின்  நிர்வாகத்தினர்கள் அனைவரையும் அல்லாஹ்வே  தேர்ந்துதெடுத்து அறிமுகம் செய்து விட்டான் . அவர்களை தேடிக் கண்டுபிடித்து மஸ்ஜிதுகளின்  பொறுப்பாளியாக நியமிப்பதுதான்  முஸ்லிம்களின் கடமையாகும் . இறைவன் தேர்வு செய்த மஸ்ஜிதுகளின்  நிர்வாகத்தினர்கள் யார் ? இதோ !
அல்லாஹ்வின்  மஸ்ஜித்களை  பரிபாலனம் செய்யக்கூடியவர்கள் , அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையை கடைபிடித்து ஜக்காத்தை (முறையாகக் ) கொடுத்து அல்லாஹ்வை தவிர வேறெதற்கும்  அஞ்சாதவர்கள்  தாம். இத்தகையவர்தாம் நிச்சயமாக நேர்வழி பெற்றவர்கள் ஆவார்கள் .( அல் குர்ஆன்  9:18).         
                                                வஸ்ஸலாம்